வழக்கமாக
நீயா-நானாவில் பேசப்படும், விவாதிக்கப்படும் விசயங்களை நான் என்னுடனும் என்
நடைமுறை வாழ்க்கையுடன் பொருத்திப்பார்ப்பதுண்டு . நேற்று ஒரு அருமையான,
அவசியமான தலைப்பை பற்றிய ஒரு விவாதம் . “கேட்ஜட்களால்”
நாம் நடைமுறை வாழ்க்கை எந்த அளவு மாறியிருக்கிறது . நாம் கேட்ஜட்களுக்கு
அடிமையாகிவிட்டோமா ...? என்ற தலைப்பில் விவாதம் போனது .
கேட்ஜட்ன்னா
என்னன்னு கொஞ்சம் நாளைக்கு முன்னாடிதான்
தெரிஞ்சுகிட்டேன் . மனித வேலைகளை எளிமையாக்கும் எந்த ஒரு மின்னணு உபகரணமும் ,
இயந்திரமும் கேட்ஜத்தானாம். அந்தவகையில
பாத்தா செல்போன் , டிவி , கால்குலேட்டர் , கம்ப்யூட்டர் , இணையம் , மிக்சி , கிரைண்டர்
, ஃபிரிஜ் னு எல்லாமே கேட்ஜெட் தான் . சரி நாம இதுல எதுக்காவது அடிமையாகி
இருக்குறோமா, இதனால நமக்கு ஏதும் பாதிப்பிருக்கா , இல்ல நம்ம நேரத்த மிச்சம்
பண்ணுதான்னு ன்னு யோசிச்சு பார்த்தேன் .
நிச்சயமா அடிமையாகி இருக்கேன்னு தான் தோணுது
நீயா
நானா ஆரம்பிச்ச ஐந்து நிமிடங்களில் , “விஜய் டீவி பாருங்க அருமையானா ஒரு
புரோகிராம் டெலிகாஸ்ட் ஆகிட்டு இருக்குன்னு” , எனக்கு தெரிஞ்ச நாலு பிளாக்கர்
நண்பர்களுக்கு மெசெஜ் அனுப்புனேன் . அனுப்பி முடிச்சு நிகழ்ச்சியில மூழ்கிட்டேன் .
ஒன்பதரை மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி பதினொன்னரை மணி வரை நீடித்தது . ஒவ்வொரு
விளம்பர இடைவேளையிலும் செல்போன எடுத்துப் பாத்தேன் , யாருன்னா ரிப்ளை அனுப்பிச்சுருக்காங்கலான்னு
. நிகழ்ச்சி முடியும் வரை யாருமே அனுப்பல . ஒரு சின்ன ஏமாற்றத்துடன்
படுக்கப்போயிட்டேன் . நடு சாமத்துல பாத்ரூம் போக எந்திரிச்சவன் செல்போன பாக்குறேன்
ஏதாவது ரிப்ளை வந்துருக்கான்னு, அப்பவும் வல்ல . காலையில எழுந்தவுடன் பாத்தேன்
அப்பவும் வல்ல . இதோ இப்ப இந்த பதிவ டைப் பண்ணிக்கிட்டு இருக்குற வர ஒரு ரிப்ளை
கூட வல்ல. ஆரம்பத்துல ஏமாற்றமா இருந்தது இப்ப கோவமா மாறிடுச்சு , ஒருத்தர்கூட நம்ம
மெசெஜ் ஜ மதிக்கலையேன்னு . இந்த கோவம் ஒருவகையான மன உளைச்சலை தருது . மெசெஜ் ஜ
படிச்சவங்க கண்டிப்பா ரிப்ளை அனுப்பனும்னு அவசியம் இல்லைதான் . ஆனா ஏத்துக்க
முடியல .
ரெண்டுமணி
நேரம் செல்போன வீட்டுல மறந்து வச்சுட்டு போயிட்டு , திரும்பி வந்தோன்ன பாக்குற மொத
வேல , எதுனா மெசெஜ் வந்துருக்கா , மிஸ்டு கால் வந்துருக்கான்னு பாக்குறதுதன்.
ஒண்ணுமே வல்லைனா அவ்வளவு தான் . ச்சே..! ஒருத்தருக்கு கூட நம்ம முக்கியமில்லையா
..? நம்ம ஒர்த்தே இல்லையா ? ன்னு என் மேலேயே எனக்கு கோவம் கோவமா வருது . எப்பவுமே
போனும் , மெசெஜ் மா இருக்குறவங்கள பாக்கும் போது எரிச்சலும் , பொறாமையும் வருது .
இந்த ஒலகத்துல இருந்து என்னைய மட்டும் தனியாக பிரித்து வைத்த மாதிரியும் , வெகுவாக
அந்நியப்படுத்தப்பட்ட மாதிரியும் ஒரு உணர்வு . பேஸ்புக் ல ஒரு போட்டோவும் , ஸ்டேட்டசும் போட்டுட்டு
மறுநாள் போயி பாக்கும்போது கொறஞ்சது நாலு லைக்ஸ் ம் , ரெண்டு கமெண்டும்
வந்திருந்தாதான் திருப்தியா இருக்கு , வாழ்வதற்கே அர்த்தம் இருக்குற மாதிரி ஒரு
திருப்தி . ஒண்ணுமே வரலைன்னா ...அய்யய்யோ
அந்த வலிய சொல்லவே முடியாது . இதே கத தான் பிளாக்ல எழுதுற பதிவுக்கும் .
நாலு
மாசத்துக்கு முன்னாடி வர பிளாக்ன்னா என்னன்னே தெரியாது . இப்ப பிளாக்
ஆரம்பிச்சத்திலருந்து , தெனமும் கொறஞ்சது ஒரு மணி நேரமாவுது அதுல செலவாகிடுது.
பிளாக் ஒப்பன் பண்ணி பாக்கலைனா அன்னைக்கு நாளே முழுமையடையாத மாதிரி இருக்கு .
எதையோ இழந்த மாதிரி ஒரு உணர்வு .
ஆரம்பத்துல ஏதோ நம்ம அனுபவங்களையும் , எண்ணங்களையும் பதிவா போடலாம்னு நெனச்சு
பதிவு போட்டவன் இப்ப பதிவு போடுவதற்காகவே அனுபவங்களையும் , எண்ணங்களையும் தேடுகிறேன்
. பார்க்கும் எல்லாவற்றையும் பதிவாக போட மனம் துடிக்கிறது . தூங்கும் போது ,
படிக்கும் போது , குளிக்கும் போது என எல்லா நேரமும் இதே சிந்தனை . வேலை நேரம்
முடிந்து , பிளாக் பாத்து வீட்டுக்கு போகும்போது மணி எட்டு ஆகிடுது . அம்மா இப்ப
அடிக்கடி கேக்குது , என்னாச்சுப்பா ஆபிஸ்ல வேல அதிகமா ? மொகம் சொரத்தே இல்லாம
இருக்கே...? ரெம்ப டல்லா இருக்கியேன்னு ..? என்ன சொல்வது அம்மாவிடம் .
இத்தனைக்கும் ஆபீஸ்ல வேல ரெம்ப கம்மி , ஆஃப் சீசன் .
பிளாக்
பாலோவ் பண்றதுனாலயும், பிளாக் ல எழுதுரதுனாலயும் நெறைய தெரிஞ்சுக்க முடியுதுதான் , புது நண்பர்கள் கிடைக்கிறாங்கதான் . ஆனா அதற்கான
விலை அதிகமா இருக்குதோன்னு கொஞ்சம் பயமாவும் இருக்கு . கை நீட்டி உதவி கேக்கும்
பிசைக்காரனை உதாசீனப்படுத்திவிட்டு கோவில் உண்டியலில் பணம் போடுவதைப்போல , அக்கம்
பக்கம் இருப்பவர்களை தவிர்த்துவிட்டு, அவர்களுடன் உரையாடுவதை முற்றிலும்
நிறுத்திவிட்டு , எங்கோ அண்டை மாநிலத்திலும் , அண்டை நாட்டிலும் இருக்கும் யாருடனோ
சாட் செய்வது உறுத்தலாக இருக்கிறது .
இந்த
உலகத்தோடு கணினி வழியாகவும் , இணையம் வழியாகவும் , தொலைகாட்சி வழியாகவும் தான் இணைந்திருக்கிறேன்.
எங்காவது டூர் போனால் கூட இயற்கையை கண்களால் பார்த்து காட்சிப்படுத்துவதைவிட காமிராக் கண்களில் தான்
அதிகம் பார்க்கிறேன் , பார்ப்பவை அனைத்தையும் காமிராவில காட்சிப்படுத்த
தோன்றுகிறது . டூர் தராத சந்தோசத்தை, டூர் போட்டோவுக்கு பேஸ்புக்கில்
கிடைக்கும் கமென்ட்சும் , லைக்சும் தருகிறது .
மொழி
தெரியாத ஒரு புது ஊருல ஒருத்தர கொண்டு போயி விட்டுட்டு , எப்டி இருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவாங்க ....? “கண்ணைக்கட்டி
காட்டுல விட்ட மாதிரி இருக்கும்பாங்க ” . இப்பல்லாம் மொழி தெரியாத ஒரு புது ஊருல ஒருத்தர
கொண்டு போயி விடணும்னு அவசியமே இல்ல , ரெம்ப சிம்பிள், செல்போன
புடுங்கிட்டீங்கன்னா போதும். அதுவே கண்ணக்கட்டி காட்டுல விட்டதுக்கு சமம் தான் .
ஒங்களுக்கு எத்தன போன் நம்பர் மனப்பாடமா தெரியும் .? எனக்கு மூணே மூணு நம்பர் தான்
தெரியும் . இந்த கேட்ஜட்கள் ஞாபக சக்திய சுத்தமா மழுங்கடிச்சுடுச்சு . பஸ்ல நூறு
ரூபா கொடுத்து ரெண்டு டிக்கட் போக , மீதி சில்லறையை வாங்கி மூணு மொற என்னுனாலும்
கணக்கு பிடிபடவே மாட்டீங்குது . கடசில செல்போன் கால்குலேட்டர்ல தட்டி பாத்தாதான்
கரெக்டா இல்லையான்னே தெரியுது .
சமீபத்துல
ஒரு பதிவர் எழுதி இருந்தார் ... தமிழ்நாட்டுல மொத்தம் ஏழரை கோடி சினிமா
விமர்சகர்கள் இருக்கறாங்கன்னு . அதுல ஒரு சின்ன திருத்தம், ஏழரை கோடி சினிமா விமர்சகர்கள்
இல்லை ஏழரை கோடி நியூஸ் ரீடர்கள் இருக்கிறாங்கன்னு சொல்றதுதான் கரக்டு . செய்திகளை
முந்தித்தருவதில் தொலைக்”கட்சி” களுக்கு மட்டும் போட்டியல்ல , நம் அனைவருக்குமே போட்டிதான்
. எனக்கு ஒரு நியூஸ் தெரிஞ்ச ஒடனே அப்டேட் பண்ணனும்னு கையும் , நாக்கும் அறிக்க ஆரம்பிச்சுடுது . பிளாக் , பேஸ்புக் ,
டுவிட்டர் , மெசெஜ்னு அது எந்த மீடியமோ
ஒடனே அப்டேட் பண்ணனும் . இது எதுவுமே இல்லையா இருக்கவே இருக்கு வாய் .
போனவாரம்
தூரத்து நண்பர் ஒருவர், ஆபீஸ்க்கு வந்தவுடன் நேர எங்க கேபினுக்கு வந்தார் . அவரே
பேச ஆரம்பிச்சார் .. இன்னைக்கு என்னாச்சு தெரியுமா ..? “காலைல ஆபீசுக்கு வந்துட்டு
இருக்கும்போது , பீளமேட்டுக்கு பக்கத்துல ஒரு பெரிய ஆக்சிடன்ட் ..................................................................!
புதிய
தலைமுறை நிருபரையும் விட விரிவாவும் , நுணுக்கமாவும் ஆக்சிடண்ட விவரிக்க
ஆரம்பிச்சுட்டார் . பேசிகிட்டு இருக்கும்போதே சட்டுன்னு செல்போன்ல படம் பிடிச்ச
வீடியோவ காமிக்குறார். ஏன் எங்ககிட்ட சொன்னாருன்னு தெரியல , சொல்லி முடிச்சு
போயிட்டார் . மதியம் பாத்தா வேறொரு
கேபின்ல அதே ஆக்சிட்டேன்ட அதே மாதிரி சொல்லிட்டு இருக்கார் . மறுநாள் காலைல
பேப்பரோட வந்தார் , பாத்தியா நேத்தே நான் சொன்னன்ல அது நியூசா வந்துருக்கு பார் .
இந்த “நேத்தே நா சொன்னேன்ல” இருந்த அழுத்தத்த என்னால உணர முடிஞ்சுது . அவர் மட்டுமல்ல
நா கூட நெறைய தடவ இப்டிதான் .
இந்த
ஒலகத்துலேயே மிகப்பெரிய கெட்ட பழக்கம் எதுன்னு என்னைய கேட்டீங்கன்னா டீ.வி. யையும்
, செல்போனையும் தான் சொல்லுவேன் . தண்ணியடிக்குரத விடுறதோ , தம்மடிக்குரத் விடுறதோ
கஷ்டம் இல்லங்க டி.வி பாக்குறதையும் , செல்போன் பேசுறதையும் விடுறதுதான் ரெம்ப கஷ்டம் . எதாவது ஒரு சேனல் பாத்துட்டு
இருப்பேன் விளம்பரம் வந்துட்டா ஒடனே அடுத்த சேனல் அப்புறம் அதுக்கடுத்த சேனல் ,
இப்டியே இமைக்காம பாத்துட்டே இருப்பேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி வீட்டுல நடந்த
ஒரு சண்டைல ரிமோட்ட தூக்கிபோட்டு ஒடச்சுட்டேன் , ஸோ, இப்பல்லாம் ஒரே சேனல் தான்
பாக்குறேன் . சோம்பேறித்தனம் , யாரு எந்திரிச்சு போயி டி.வி ல சேனல் மாத்தறதுங்குற
சோம்பேறித்தனம் . விளம்பர இடைவெளியம்போது கண்ண மூடிக்குவேன் . அது கொஞ்சம்
ரிலாக்ஸ்டா இருக்கு . அம்மாவும் , வீட்டுக்காரம்மாவும் ரிமோட் வாங்க சொல்றாங்க நா
வாங்குறதா இல்ல. இதவிட பெரிய சண்டை வராமலா போயிடும் , கண்டிப்பா வரும் . ங்கொய்யால
அப்டி வரும்போது டி.வி ய தூக்கிப்போட்டு ஒடச்சுடனும் , சனியன் அத்தோட
தொலஞ்சுதுன்ன்னு நிம்மதியா இருக்கணும் .
நேத்து
சென்னையிலருந்து நண்பன் புத்தாண்டு வாழ்த்து சொல்லி மெசெஜ் அனுப்பி இருந்தான் .
சரி ரெம்ப நாளாச்சேன்னு பதிலுக்கு கூப்ட்டேன் , ரெண்டாவது கூப்பிடுக்கு அழைப்பில்
வந்தான் . உற்சாகமா பேச ஆரம்பிச்சவன்ட்ட இருந்து
கொஞ்ச நேரத்துல ம் ம் ம்க்குற சத்தம் மட்டுந்தான் வருது , நா மட்டும் தான்
பேசிட்டு இருக்கேன் . என்னடான்னு கேட்டா,
இல்லடா எங்க கம்பெனிக்கு அவார்ட் கொடுக்குறாங்க அதான் டி.வி ல பாத்துட்டு
இருக்கேன் , நா ஈவ்னிங் கூப்ப்டட்டா ன்னு கேட்டுட்டு, நா பதில் சொல்றதுக்கு
முன்னாடியே கட் பண்ணிட்டான் . ரெண்டு ஈவ்னிங் முடிஞ்சுது இன்னும் போன் வரல . யோசிச்சு
பாத்தா நாங்கூட அப்டிதான் , சூப்பர் சிங்கர் பாக்கும்போது யாரும் கூப்ட்டாலும்
எடுக்குறதே இல்ல . விளம்பர இடைவெளியம்போதுதான் பேசுவேன் . ஏன் எடுக்கலைன்னு கேட்டா
பாத்ரூம்ல இருந்தேன் , சார்ஜ் போட்டுருந்தேன் , சைலண்டல போட்டுட்டேன்னு குறைந்த
பட்ச நேர்மை கூட இல்லாம கூசமா ஒரு பொய் . வீட்டுக்கரம்மாவுக்கு தெரிஞ்சுடுச்சு , இப்பல்லாம்
விளம்பர இடைவெளிகள் ல கூப்பிட பழகிட்டார் .
டிவி
யாவது பரவால்லன்னு சொல்லலாம் , நமக்கு புடிக்குதோ இல்லையோ சேனல் போடுற
புரோகிராமத்தான் பாக்கணும் , அதுக்கும் கரண்டு வேணும் . ஆனா இந்த செல்போன் இருக்கே
, எத வேணும்னாலும் பாக்கலாம் , எப்ப வேணும்னாலும் பாக்கலாம் , கரண்ட் தேவையில்ல .
கட்டற்ற சுதந்திரம் தவறான பாதைக்கு நம்மள இழுத்துட்டு போகுதோன்னு ஒரு கவல
இருந்துட்டே இருக்கு. ஆனாலும் விட முடியல .
“அபியும்
நானும்”ல பிரகாஷ் ராஜ் கேக்குற மாதிரி , நிலாவ எப்ப கடசியா ரசிச்சு பாத்தேன்னு
என்ன நானே கேட்டுக்கிட்டேன் .....! ரெம்ப நேரம் யோசிச்ச பெறகும் தெய்வத்திருமகள் படத்துல
நிலாவ ரசிச்சதுதான் ஞாபகத்துக்கு வருது . வீட்டு பால்கனில ஒக்காந்து நிலாவப் பாக்கக்கூட நேரம் இல்ல , இதுல எங்க போயி ரசிக்குறது .
சரி
கடசியா யாரோட பிறந்தநாளுக்காவது அப்டியே கட்டிப்பிடிச்சு , கைகொடுத்து மனசார
வார்த்தைகள விட்டு வாழ்த்தி இருக்கோமான்னு யோசிச்சு பாக்குறேன் . இல்லவே இல்ல. ஸ்மைலி
படம் போட்டு ரெண்டுவரில ஒரு மெசெஜ் , விஸ் யூ ஹேப்பி பர்த்டே, அவ்ளோதான் .
வெளிநாட்டுலயோ , வெளி மாநிலத்துலையோ இருந்த பேஸ்புக்ல ஒரு மெசெஜ் ஓவர் .
இப்பல்லாம் காதல் மொட்டாவதும் , மலர்வதும் , இணைவதும் கூடிப்பிரிவதும் இப்டி
எல்லாமே டெக்ஸ்ட் மெசெஜ்லதான் .
கடசியா
யாருக்கு கைபட கடிதம் எழுதினேன் ...! ஞாபகமே இல்ல . கடிதமும் , கடிதம் கொண்டுவரும்
தபால்காரரும் மறந்தே போய்விட்டார்கள் . இப்பல்லாம் பேனா பிடிச்சு ரெண்டு
வார்த்தைகள் எழுதுவதற்கே ரெம்ப கஷ்டமாக
இருக்கிறது .
கடசியா,
யாருக்கு பரிசு வாங்கி கொடுத்திருக்கிறேன் , எப்ப வாங்கி கொடுத்தேன்னு யோசிச்சு
பாக்குறேன் . அப்டி ஒரு நிகழ்வு நடந்ததாவே ஞாபகம் இல்ல . வேகமான இந்த வாழ்க்கையில
நமக்கு என்ன புடிக்கும்னே நமக்கு தெரிஞ்சுக்க நேரமில்ல , இதுல அடுத்தவனுக்கு என்ன
புடிக்கும்னு தெரிஞ்சு , அத கடையில போயி வாங்கி ..... அட போங்கப்பா....! அம்பதோ
நூறோ மொய் வச்சு , செயற்கையா போட்டோவுக்கு ஒரு போஸ் கொடுத்துட்டு திரும்புவதுதான் வழக்கமாயிடுச்சு .
கேட்ஜெட்ஸ்
இல்லாத ஒரு ஒலகத்த நெனச்சு பாக்கவே முடியல ...! ஃபேன் இல்லாம தூங்க முடியல , டூ வீலரும்
, செல்போனும் இல்லாம வெளில போக முடியல , ஃபிர்ட்ஜ்ம் , கியாசும் இல்லாத சமையலறைகுள்ள
போகவே முடியல . நாளுக்கு நாள் டிப்பெண்டன்ஷி அதிகமாயிட்டே போகுது . ஈ வேஸ்ட்டும் தான் .
டெக்னாலஜி
வளர்ந்துடுச்சுன்னும் , ஒலகம் ரெம்ப
சுருங்கி உள்ளங்கைக்குள்ள வந்துடுச்சுன்னும் சொல்றாங்க . வாஸ்தவம் தான் ,
உண்மையும் அதுதான் . அதேவேளையில், டெக்னாலஜியால உலகம் சுருங்கியதைவிட அதிகமாக
மனிதர்களிடம் மனிதமும் , ஈரமும் , இரக்கமும் , இயல்பும், உடல் நலமும் , சகிப்புத்தன்மையும்
, பொறுமையும் சுருங்கிவிட்டது என்பதும் உண்மை . மறுக்க முடியாத உண்மை .