எல்லாரும்
பாத்துக்குங்க
நானும்
பதிவர்
! நானும் பதிவர்
! நானும்
பதிவர்
! அப்டின்னு
சொல்லாமலே
டிசம்பர்
30 ல திருப்பூர் பதிவர்
சந்திப்புல
சங்கமம்
ஆனேன்
. ( இதுவரைக்கும்
சுமாரா
, ரெம்ப
சுமாரா
ஒரே
ஒரு
பதிவு
போட்டுட்டு
அதுவும்
ஒரே
வரில
போட்டுட்டு
மொத
ஆளா
போனது
வேற
விஷயம்
)
சொந்தம்
, நட்பு
, இது
இல்லாம
ஒரு
புதிய
உறவுகளை
சந்திக்க
போற
ஒரு
ஆர்வம்
மேலோங்க
போன
முதல்
சந்திப்பு
.
நிறைய
வருடல்களையும்
கொஞ்சமே
கொஞ்சம்
நெருடல்களையும்
தந்த
சந்திப்பை
பற்றி
சுருக்கமா
( ? )..
வருஷ
கணக்குல
கூடவே
சேர்ந்து
வாழ்ந்தாலும்
ஒருத்தர
இவர்
இப்டிதான்னு
உறுதியா
சொல்லிடமுடியாது
. சந்தர்ப்பமும்
, சூழ்நிலையும்
ஒருத்தர
எப்டி
வேணும்னாலும்
மாத்தலாம்
. அப்டி
இருக்கும்
போது
நிமிச
நேர
சந்திப்பின்
மூலம்
யாரையும்
மதிப்பிட
முடியாது
, கூடாது
. அதே
நேரம் ஒருத்தர பத்தின
நல்ல
விசயங்கள
பதிய
நிமிச
நேரம்
போதும்னு
நெனச்சதால
இந்த
பதிவு.
அருண்
மொத
நாளே
தொலைபேசியில என் வருகையை
உறுதிபடுத்திக்கிட்டாரு.
மொதல்ல
சந்திச்சதே
இவர்தான்
.
நம்மள
பாத்தொன்ன மொதல்ல இவர் சொன்னது ...
நண்பா
! நெறைய
வேல
இருக்கு கைய கட்டிக்கிட்டு வேடிக்க பாக்காம
, இழுத்து
போட்டு
வேல
செய்யனும்னு
என்ன
? .
( அதெப்டி கரெக்டா
கண்டுபுடிசாப்லன்னு தெரியல..! ). இழுத்து
போட்டு
வேல
செய்யனும்னு
சொன்னதாலோ
என்னவோ
ஒரு
சேர
மட்டும்
இழுத்து
போட்டதோட
சரி
. ( உண்மையிலே
வேற
வேல
இல்லங்க
.)
ஆரம்பத்துல இருந்து கடசி வரைக்கும் கொஞ்சம் கூட சோர்வடையாம பர பரன்னு
பம்பரமா
சுத்தி
வேல
பாத்தாருங்க
.
சீனு
ஒரு
சில
பெயர்கள
உச்சரிக்கும்
போதே
ஒரு
நெருக்கத்தையும்
, பிரியத்தையும்
உணரமுடியும். ஆனா பழகி
பார்த்தா
மொத்தமா
முரண்படுவாங்க
. சீனுவும்
அப்டிதான்
ஆனா
முரண்பாடில்லாதவர்
. பெயரைபோலவே பழகுவதற்கும் இனிமையான ஆளு .
பழகிய
கூட்டத்திலே
பம்மி
பதுங்குற
ஆளு
நாம, புது கூட்டம்
பாத்து
மிரண்டு
போயி
ஒதுங்குனா,
விடாம கடைசி வர
அரவணைச்சு
ஆதரவு
கொடுதாப்புல.
பார்த்தா
பள்ளிகூடம்
போற
பையனாட்டம்
“சாதரணமாக”
இருக்காரு
. ஆனா
எழுத்துல
“அசாதரணமான
“முதிர்ச்சி
. அழகியல்
முரண்பாடு
..!.
கவுதம்
பாணியில
இவர்
எழுத்த
சொல்லனும்னா
... " அவ்ளோ
அழகு
!". வலைச்சரத்தில்
எழுதுச்சரம் தொடுக்கப் போகும் சீனுவுக்கு ஒரு மலர்ச்சரம் ..
ஜோதிஜி
டாலர்
நகரத்தின்
தந்தை
. நான்
சந்தித்த
முதல்
பதிவர். எண்ணம் , எழுத்து , சொல், செயல்
எல்லாம்
கை
வர
பெற்றவர்.
அந்த
வகையில
வரம்
வாங்கி
வந்தவருன்னு
சொல்லலாம்.
( சொல்லாடல்
உபயம்
டா.ந.த.)
ஒரு
சில
தினங்களில்
தன்னோட
மொத
புஸ்தக
குழந்தைய
பிரசவிக்க
இருக்காரு
அண்ணன்
. ஊரும்
பெரும்
கூடி
, சீரும்
சிறப்புமா
பிரசவம்
,தல
பிரசவமா
நடக்கும்னு
... வாழ்த்தவோ
, வணங்கவோ
, இறைவனை
வேண்டவோ
வேண்டாம்.
எண்ணுவோம்
அது
போதும்
. ஏன்னா
எண்ணம்
போல்
வாழ்வு
, எண்ணங்கள்
வலிமையானது .
( சொல்லாடல் உபயம்
எம்.எஸ்
.உதயமூர்த்தி
அய்யா
. நீங்க
இன்னும்
இது
போன்ற
வார்த்தைகளால்
வாழ்ந்து
கொண்டுதான்
இருக்கீங்க
.)
கண்மணி
அன்போடு
சகோதரி
கண்மணி
, தன
ரெண்டு
கண்களோடு
அன்போடு
வந்திருந்தார்.
நடை
உடை
பாவனை
நிகழ்ச்சியை
தொகுத்து
வழங்கிய
விதம்
அத்துனையும்
ரெம்ப
நேர்த்தி
கண்ணியம்
.
மதுமதி
மனுஷன்
சிரிக்க
சிரிக்க
இனிக்க
இனிக்க
பேசுராருங்க.ஒரு
வரலாறையே போற போக்குல
சொல்றாரு
. இவர்
மேடையில
பேசுவாருன்னு
போட்ருந்தாங்க
ரெம்ப
எதிர்பார்த்து
காத்திருந்தேன்
. வழக்கம்போல
எதிர்பார்ப்புகள்
ஏமாற்ற
தவறுவதில்லை
ங்குறது
நிருபணம் ஆச்சு .
செழியன்
& விஜயன்
இருபதில் இருக்குற வாலிபங்கள் . இந்த வயசுல ஒயரம் வளரும் பரு கூட வளருமா
என்ன அப்டின்னு ஒரு சோப்பு வெளம்பரம் தொல்லைகாட்சியில வந்துட்டுருக்கு . அது மாதிரி
இந்த வயசுல Facebook ல இருப்பாங்க Twitter
ல இருப்பாங்க, ஆனா Blog ல இருப்பாங்களா எழுதுவாங்களான்னு ஆச்சர்யபடுத்தியவர்கள் .
சிபி செந்தில்
சிம்மக்கொரலோன் .அட்ராசக்க ! என்ன கொரலுப்பா ? மொத ஆளுமையையும் ஒத்த கொரல்ல
வச்ருக்காருங்க . மனுஷன் ரகசியத்த கூட போக்ரான்ல போட்ட குண்டாட்டம் சொல்லுவாராட்டுக்கு
. எதோ அலக்சா ராங்கிங் ல டாப்புன்னாங்க . நமக்கு அலேக்சாவும் தெரியாது அண்டார்டிகாவும்
தெரியாது. எதோ பெரிய ஆளுன்னு புரிஞ்சுகிட்டேன்.
ஈஸ்வரன்
நிகழ்ச்சியின் பிரம்மா . முடிவு பண்ணி கொஞ்ச நாள்ல நிகழ்ச்சிய சிறப்பா நடத்திட்டாங்க
. ரெம்ப எளிமையாத்தான் இருந்தாரு . ரெண்டு வேல டீ மத்தியானத்துக்கு வகைக்கு ஒண்ணா மூணு
சோறு ன்னு நல்ல உபசரிப்பு .
திண்டுக்கல்
தனபாலன்
பின்னூட்டத்தின் சக்கரவர்த்தி , இல்லனா பின்னூட்ட புயல்னு சொல்லலாம் . நிலாவுக்கு
போனா கூட அங்க ஒரு நாயர் சாயா கட வச்சுருப்பாருன்னு சொல்லுவாங்க , அது மாதிரி ஒலகத்துல
எந்த மூலையில யாரு பதிவு போட்டாலும்
அங்க நம்ம அண்ணனோட பின்னுட்டம் இருக்கும்
. எனக்கு
கூட
இவருதாங்க
மொதல்ல
பின்னுட்டுனாரு. கடமைய செய்
பலன
எதிபாராத
, எதிர்பார்க்கலனா
ஏமாற்றம்
இல்லன்னு,
ஆயிரம் சொன்னாலும் , மனசு
ஏந்குதே
அங்கீகாரத்துக்கு
. ஒரே
ஒரு
வரில
ஒரே
ஒரு
பதிவு
போட்டுட்டு
ஒரு
நாளக்கி
ஒம்பது
வாட்டி
ஒப்பேன்
பண்ணி
பாக்குற
என்ன
மாதிரி
ஆளுக்கெல்லாம்
நீங்க
தெய்வம் ....!
தாய்த்தமிழ்
பள்ளி
குழந்தைகள்
:
தமிழின்
மேல
இருக்குற
பேரன்பையும்
அந்நிய
மொழிகள்
மேல்
இருக்குற
பெருங்கோபத்தையும்
இயல் இசை நாடகம் அப்புறம் வேல்குச்சி கொண்டு அட்டகாசமா வெளிபடுத்துனாங்க. இயக்குனர்
பாலா ஒரு மிகச்சிறந்த வலி கடத்தி அப்டின்னு நாஞ்சில் நாடன் அய்யா ஒரு பேட்டியில சொல்லிருந்தாரு
, அது மாதிரி இந்த கொழந்தைங்க தமிழ் உணர்வை
நம்முள் கடத்துவதில் ஆகச்சிறந்தவர்கள்.
இந்த நேரத்துல
இவர்களின்
ஆசிரியர்களையும்
, நிர்வாகியையும்
கண்டிப்பா
வணங்கணும்
. ஒரு
கொழந்த
பாடும்போது
தொண்ட
கட்டி
பாடமுடியாம
பாதில
நிறுத்திடுச்சு
. இந்த
நேரத்துல
அவங்க
ஆசிரியர்கள்
என்ன
பண்றாங்க
ரியாக்ட்
பண்ணுறாங்களா
இல்ல
ரெஸ்பாண்ட்
பண்றாங்களான்னு
பாத்தா..
ஒருத்தர்
கூட
முகம்
சுளிக்கல
அத்தன
பேரும்
அந்த
கொழந்தய
அரவனச்சுகிட்டாங்க
.கான்வன்ட்ல
இதல்லாம்
நெனச்சு
கூட
பார்க்க
முடியாது
.
இவ்வளவு
வருடல்களுக்கு
மத்தியில
கொஞ்சம்
நெருடல்கள்
...
1.திட்டமிட்டபடி
எல்லாருக்கும்
பேச
வாய்ப்பு
கொடுக்க
முடியாம
போனது
.
2.தனியா
சகாயம்
அவர்களுக்கு
வச்ச
வெளம்பர
தட்டி
( அவரே நிச்சயமா விரும்பமாட்டாரு
)
3. ரெம்ப
முக்கியமா
கலை
நிகழ்ச்சி
நடந்துட்டு
இருக்கும்
போதே
ரெண்டு
பேரு
மேடையில
ஏறி
சகாயம்
அவர்களுக்கு
வெச்சுருந்த
வெளம்பர
தட்டிய
மாத்து
மாத்துன்னு
எடம்
மாத்திகிட்டு
இருந்தாங்க
. ( அவங்க
நோக்கம்
நல்லாவே
தெரிஞ்சுது
.)
ஆதலால்
அறிவுரை
செய்வீர்
:
இந்த
கால்
குறி , அரை குறி
, முக்கா
குறி , முழு குறி
அப்புறம் ஆச்சர்யகுறி இதெல்லாம்
தெரியாத
தற்குறி
நான்
. ஆதலால்
தெரிஞ்சவங்க
அறிஞ்சவங்க
அறிவுர
சொன்னிங்க
னா
நானும்
தெரிஞ்சுக்குவேன்
.
பிகு
: அடேங்கப்பா
! இந்த
ஒரு
பதிவுக்கே
நாக்கு
தள்ளி
போச்சு
. ஒன்ரெண்டு வார்த்தைகள எழுத்துல
கொடுவரதுக்கு
கீ
போர்டு
கூட
பெரிய
போராட்டமே
நடத்தவேண்டியதாப்போச்சு
. எப்டி
தான்
தெனம்
பதிவு
போடுறாங்களோ
. ரெம்ப
குஷ்டமப்பா
...!
மறுபடியும்
எழுதுறதுக்கு தெம்பும் திராணியும்
வந்தா
வண்ணத்துப்பூச்சி பறக்கும் .
அது
வர
ரெஸ்ட்
! ரெஸ்ட்
! ரெஸ்ட்
...!
( ஏன்னா
தமிழ்
ல்ல
எமக்கு
புடிக்காத
வார்த்த
ஓய்வு!
ஓய்வு!
ஓய்வு!
)