Dec 18, 2014

பேசாத வார்த்தைகள் 18.12.2014



மெட்ராஸ் படத்தில் வரும் "காகித கப்பல் " இப்பொழுது விரும்பி பார்க்கும் பாடல் . பாடல் வரிகள்  ,  இசை  இரண்டையும் மீறி கவனம் கவர்வது - நடனம். ஒவ்வொரு அசைவும் அழகானதொரு கைக்கூ . மேற்படி நடனத்திற்கு பெயர் என்னவென்று தெரியவில்லை மைமிங்  ன்னு ஒன்றுள்ளது அது இதுதானா ?   வருடங்களுக்கு முன்பு அரவிந்தசாமி படம் ஒன்றிலும் பிறகு பானா காத்தாடி படத்திலும் இதைப்போன்றதொரு நடனம் பார்த்த நினைவு. மிகச் சமீபத்தில் சூது கவ்வும் படத்தில் வரும் காசு பணம் கூட மேற்படி வகையறாதான் என்று நினைக்கின்றேன் . 




ரெம்ப நாள் வாங்கனும்னு நனைச்சு சுமந்த ஆசையை பிழிந்து காயப்போட்டாச்சு . சல்லிசான ? விலையில் மடிக்கணினி ஒன்று வாங்கியாச்சு கூடவே ப்ளிப்கார்ட் ல் டேட்டா கார்டும் .  ஆம் அது உங்களை நோக்கித்தான் வரப்போகின்றது ஓடுங்கள் ...:) சகாயமான விலையில் இணைய இணைப்பை தரும் நெட்வொர்க் பற்றிய தகவல்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன .


சமீபத்தில் வாழ்க வளமுடன் அமைப்பின் யோகப் பயிற்சிக்கு போய் வந்தேன் . பதினைந்து நாள் வகுப்புக்கு பத்து நாள் போய் வந்ததே வாழ்நாள் சாதனையாயிற்று இத்தனைக்கும் வகுப்பு நடந்தது பக்கத்து கட்டிடத்தில்  .வஜ்ராசனம் என்று ஒன்றை போட சொன்னார்கள் .... எட்டு போட சொன்ன RTO  ஆபிசரே பரவா இல்ல... முடிலப்பா முடில  :(  .


பத்து வருடங்களுக்கு பிறகு  குப்பை கொட்டும் விலாசத்தை  மாற்றியிருக்கிறேன் . புது வேலை ,  புது ஜாகை , புது மனிதர்கள் சுவராஸ்யம் கம் திகில்னு கலவரமா போயிட்டு இருக்கு வாழ்க்கை  . திருப்பூருக்கும் கோவைக்கும் அரைமணி நேர பயண தூரம் தான் ஆனால் திருப்பூரில் இருப்பது ஆப்பிரிக்காவில் இருப்பதை போலவும் கோவை ஆஸ்திரேலியாவில் இருப்பதைப்போலவும் பீல் ஆகுது . 


என்றென்றும் புன்னகையுடன் 
ஜீவன் சுப்பு 

  

Jun 14, 2014

பேசாத வார்த்தைகள் : சேனல்ஸ் பக்கம் - புதுயுகம் & மக்கள்



புதுயுகம் மற்றும் மக்கள் தொலைக்காட்சிகளில் சிலபல நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன . போதிய promo இல்லாததினால் வெகு ஜன பார்வையாளர்களை சென்றடைவதில்லை .

புதுயுகம் தொலைக்காட்சியின் பெரிய minus என்று பார்த்தால் Galrity & Background settings . என்பது தொன்னூறுகளில் பொதிகை பார்த்த effect . மக்கள் - ரெம்ப நல்லாவே இருக்கு -குறை சொல்ல ஒண்ணுமில்லை .

புதுயுகம் :
  
உயிரே  உனக்காக படத்தில் வரும் ஓடோடி விளையாடு பாடலில் நதியாவின் தாத்தாவாக வருவாரே மீசை தாத்தா அவரின் பேட்டியை சமீபத்தில் புதுயுகம் தொலைக்காட்சியின் கேள்வி பாதி கிண்டால் பாதி நிகழ்ச்சியில் பார்த்தேன் .  நேற்றுவரை ஐயாவை ஒரு நடிகராகத்தான் நினைத்திருந்தேன். ஆனால் பெரியவர் Instrument வாசிப்பதில் கில்லாடியாம் . Instrument என்றால் யமகா பியானோ வோ , World class வயலினோ இன்ன பிற Electronic கருவிகளோ இல்லை . கொட்டாங்குச்சி , பழைய தகரம் அவ்வளவு தான் . ச்சும்மா பின்றாருங்க ...! அய்யாவின் பெயர் மீசை முருகேசனாம் . கலைமாமணி பட்டம் வாங்கியிருக்கிறார் .

ராஜாவின் பார்வை ராணியின் - பாடலில் வரும் குதிரை ஓடும் சத்தம் அய்யாவின் கொட்டாங்குச்சியில் இருந்து வந்ததாம் . EXCELLENT ! மேற்படி நிகழ்ச்சியின் இணைப்பு இங்கே .





மக்கள் - நொடிக்கு நொடி - சிட்டு 

மக்கள் தொலைக்காட்சியில் தினமும் இரவு ஒன்பது மணி முதல் பத்து மணி வரை ஒளிபரப்பாகும் நொடிக்கு நொடி நிகழ்ச்சி - one of my favourite . காரணம் சொல்லித்தெரியவேண்டியதில்லை :) . சித்ரா செல்லமா சிட்டு என்னமா தொகுத்து வழங்குது பொண்ணு . அடேங்கப்பா எவ்வளவு Expression ஸ் . 

தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிக்கும் நிகழ்ச்சி - அழகான பொண்ணு , அதைவிட அழகான குரல் & உடல் மொழி எல்லாவற்றிலும் மேலான பேரழகுத் தமிழ் வார்த்தைகள் . நேரம் கிடைப்பின் பாருங்கள் .







என்றென்றும் புன்னகையுடன் 

ஜீவன் சுப்பு .


Jun 4, 2014

பேசாத வார்த்தைகள் : நான் சிகப்பு மனிதன் , வந்தனா ஸ்ரீ , லாவகம் & COMING SOON.




நான் சிகப்பு மனிதன் படத்தில் வரும் “ஒ பெண்ணே” பாடல் சமீபத்தில் விரும்பிக் கேட்கும் பாடல்களில் ஒன்று . முதலில் ஈர்த்தது ஆண் குரல் . ஏதேது சுக்விந்தர் சிங்கையோ இல்லை உதித் நாராயணனையோ திருப்பி அழைத்துத வந்துவிட்டார்களோ என்று பார்த்தால் AL-RUFIAN என்ற பையன் பாடியிருக்கிறார் . இன்னும் யுவன் காதுகளில் சிக்கவில்லை போல J .

மேற்படி பாடலில் வரும் பெண் குரல் வந்தனா ஸ்ரீனிவாசனுடையது . எமக்கு பிடித்தமான பெண் பாடகர்களில் ஒருவர் . தாண்டவத்தில் வரும் ஒரு பாதிக் கதவு , ராஜா ராணியின் உன்னாலே , ரம்மியின் – கூட மேல இவையெல்லாம் வந்தனா வசீகரித்த பாடல்கள். வந்தனாவின் குரலில் தொக்கி நிற்கும் அக்கறை எனக்கு ரெம்பப் பிடிக்கும் .

ரெண்டு நாள் முன்பு local channel ல் நா.சி.ம இடைவேளை வரையிலும் பார்த்தேன் . சமீபகாலமாக விஷால் under play பண்ணி நடிக்கும் படங்கள் நன்றாகவே இருப்பதாக தோன்றுகிறது . அடக்கி வாசிப்பதற்கு சொந்தத் தாயாரிப்பும் ஒரு காரணியாக இருக்கலாம் . இருக்கட்டும் பால் பப்பாளி , பச்ச தக்காளின்னு மஞ்ச கலர் பனியனும் , ராஜ்கிரண் Under wear ம்  போட்டு பாடுவதைக் காட்டிலும் , Bare Body காட்டி பஞ்சு Dialouge பேசுவதைக் காட்டிலும் இது எவ்வளவோ மேல் .

         ***********************************************************************************************************************************

முள் மேல போட்ட சேலையை லாவகமாக எடுக்கவேண்டுமென்று சொல்வார்கள் . இப்பொழுதெல்லாம் யாரும் முள் மேல் சேலையை போடுவதும் இல்லை , காயவைப்பதுமில்லை. But , இந்த லாவகம் நிறைய இடங்களில் தேவைப்படுகின்றது . குறிப்பா பின் வரும் சில விசயங்களில்....,

* வண்டிக்கும் &SHOE க்கும் சேதாரமில்லாமல் Two Wheeler Stand ல் இருந்து வண்டியை எடுப்பதற்கு. 

* பேருந்து பயணங்களில்,  Luggage Carrier ல் திணிக்கப்பட்ட Bag ஐ எடுப்பதற்கு .

* Chain stitch மூலம் தைக்கப்பட்ட அரிசி மூட்டையை அவிழ்ப்பதற்கு.

* Two Wheeler Side ல் மாட்டப்பட்ட கட்டைப்பையை சேதாரமில்லாமல் எடுப்பதற்கு .

இதுநாள் வரைக்கும் மேற்படி விசயங்களில் இந்த லாவகம் நேக்கு கைவந்த பாடில்லை . கைப்புள்ளை கணக்காக எம் கைப்பொருள்களுக்கு சேதாரம் ஆகிக்கொண்டே இருக்கின்றது .


         ***********************************************************************************************************************************

மன்னிச்சுக்குங்க ன்னு சொல்லும் போது இருக்கும் உறுத்தலும் , வலியும் Sorry சொல்லும்போது இருப்பதே இல்லை – SORRY ஆங்கிலத்தில் எனக்கு பிடித்த வார்த்தை .

         ***********************************************************************************************************************************

நிறைய எழுத வேண்டுமென்று ஆசை , ஆனால் நாலு வரி டைப்புவதற்கே நாற்பது முறை Backspace ஐ அழுத்த வேண்டியதிருக்கு . ஆதலால், எழுத ஆசைப்படும் சில பதிவுகளின் சில தலைப்புக்களையாவது எழுதி வைக்கலாமென்ற எண்ணத்தில் ...

ஒற்றைக் குழந்தைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களா ?

இலக்கியம் – கவிதை – ஹைக்கூ Vs எம்.எஸ்.வி - ராஜா – ரஹ்மான் ...!

ரிங்டோன் கலாட்டா ...!

ஆஞ்சியோ – அதிர்ச்சி அனுபவம் ...!

M.B.A – ஒரு சபதம் !

சுன்னத் – அவசியமா ?

நான் ரசித்த பெண்கள் ...!

மாலைப்பொழுதின் மயக்கத்திலே – மவுன ராகம் ...!

இஞ்சினியரிங்கும் இண்டர்வியுவூம் ..!

பேஷன் – SOCKS SELECT செய்வது எப்படி ?

ஆடை ரசனையற்றவர்களா தமிழக ஆண்கள் ?

வாட்டர் தெரப்பி – From own Experience ..

பேசாத வார்த்தைகள் : பெண்களும் முக அலங்காரமும்  , விளம்பர யுக்தி , கோ-ஆப்டெக்ஸ் .

கேட்டால் கிடைக்கும் – MEDICLAIM .

   ***********************************************************************************************************************************

என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .




May 17, 2014

ஓஹோன்னானாம்...!





ஆனி போயி ,ஆடி போயி ஆவணி வந்தா எம்மகன் டாப்பா வாந்துடுவான்னு பட்டிக்காட்டு ஜோசியர் சொல்லிருக்காருன்னு களவாணி படத்தில் சரண்யாம்மா சொல்லியதைப்போலவே , முப்பத்தி ஒன்னு போயி , முப்பத்தி இரண்டும் போயி முப்பத்தி மூணுல நீ ஓஹோன்னு வருவேன்னு நம்மூரு விட்டி அய்யர் சொல்லீருக்காருடான்னு , விட்டி அய்யரிடம் ஜாதகம் பார்த்த கடந்த நான்கு வருடங்களாக அம்மா சொல்லிக்கொண்டிருந்த அந்த முப்பத்தி மூன்று இதோ இன்னிக்கு வந்திட்டு J ....!

கடந்த வருடம் ஆரம்பம் முதல் போன வாரம் வரை ஆப்ரேசன் , ஆஞ்சியோ , ஆஸ்பிட்டல்ன்னு ஒரே அலைச்சலும் , மன உளைச்சலுமாகவே போயிட்டு...! இந்த வருடம் ஓஹோன்னு இல்லாட்டியும் அய்யகோ ன்னு இல்லாமல் இருந்தாலே போதும் ஆண்டவா ...!

ஓஹோன்னானாம்...!



என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .

Apr 27, 2014

விளம்பரம்



மாதவன் & இமான் அண்ணாச்சி இவர்களிருவரும்தான் இன்றைய தேதிக்கு தமிழர்களை பாடாய்ப்படுத்துபவர்களில் முக்கியமானவர்கள் . பேசாமல் மேற்படி இருவரையும் நாடு கடத்திவிடல் நலம் .

எழுபத்து ஐந்து லட்சத்தில் உங்க பட்ஜெட்டுக்குள்ள வீடுன்னு சொல்லும் மாதவன் விளம்பரத்தை பார்க்கும் போதெல்லாம் பத்திக்கிட்டு வருது . தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லோருமே ஆண்டிமுத்து ராசா என்ற நினைப்பில் மேற்படி விளம்பரத்தை எடுத்திருப்பார்கள் போல . யய்யா பில்டர்களே உங்க பில்டப்பு தாங்க முடியல . நாங்கல்லாம் ஆண்டிப்பட்டிக்கு கூட ராசா கூட இல்ல வெறும் ஆண்டி மட்டுந்தேன் .

மற்றொன்று டேபிள் மேட் விளம்பரம் . ஸ்கூல் மேட் , காலேஜ் மேட் , ரூம் மேட் ஏன் ஆஃபிஸ் மேட் கூட இல்லாமல் இருக்காலாம் , ஆனால் டேபிள் மேட் இல்லாமல் இருக்கலாமா..? என்ற ரேஞ்சிற்கு படுத்துகிறார் அண்ணாச்சி . உங்க வீட்டுல டேபிள் மேட் இருக்கான்னு வாய்க்குள்ளாற மைக்க  விட்டுடுவாரோன்னு பயத்துல  இப்பொழுதெல்லாம் சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியைக்கூடப் பார்ப்பதில்லை .


கப்பித்தனமான விளம்பரங்கள் ஒருபுறம் படுத்துனாலும் , மறுபுறம் ரசனையான விளம்பரங்களுக்கும் குறைவில்லை . ஹட்சன் நிறுவனத்தினரின் ஆரோக்கியா பால் மற்றும் ஹட்சன் தயிருக்கான விளம்பரங்கள் எனக்கு மிகப் பிடித்தவை. 

எந்த உணவுப்பொருட்களில் கலப்படம் இருந்தாலும் சகித்துக்கொள்ளும் நம்மால் பாலில் மட்டும் கலப்படம் இருப்பதை சகித்துக்கொள்ளவே முடியாது . இந்த கருத்தை மிகச்சரியாகப்புரிந்து கொண்டு வெகு யதார்த்தமான பின்னணியுடன் , மிக எளிமையாக , கொஞ்சமும் ஒப்பனையற்ற ஒரு விளம்பரம் . மிக முக்கியமாக தமிழர்கள் மறந்த சுய தொழிலை , குறிப்பாக பெண்களின் தொழில் வாய்ப்பையும் முன்னேற்றத்தையும் ஒருசேர கொடுத்திருப்பது விளம்பரத்தின் சிறப்பு .






அடுத்தது மேற்படி நிறுவனத்தாரின் தயிர் விளம்பரம்.  ஆங்கில விளம்பரம் என்ற பொழுதிலும் , அட்டகாசமான பின்னணி இசையும் , எழில் கொஞ்சும் பின்புலக் காட்சிகளும் கண்களைக் கவர்ந்திழுக்கின்றன . குறிப்பாக விளம்பரம் முடியும் தருவாயில் வாயில் தயிருடன் வரும் மங்கையை பார்க்கும் பொழுது எனக்கும் வாயிலிருந்து தயிரைப்போன்றதொரு திரவம் வருகின்றது .ரசனையற்ற மனைவி அதை ஜொள்ளு என்கின்றாள் – போகட்டும் J.








என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .





Apr 12, 2014

பேசாத வார்த்தைகள் : சூப்பர் சிங்கர் , ட்வீட் , ச.இ.க.இ ...!



ட்வீட் !

சிவகங்கை தொகுதியில் நானே போட்டியிடுவதாக நினைத்து ஓட்டுப்போடவும் –ப.சிதம்பரம் பேட்டி.

அய்யய்யோ...! கிடைக்கப்போற ஒன்னு ரெண்டு ஓட்டுக்கும் வேட்டு வச்சுட்டாரே அப்பச்சி – கார்த்தி சிதம்பரம் - மைண்ட் வாய்ஸ் .

               **************************************************************************************

ச.இ.க.இ...!

மண் வாசனையை நுகராத நாசியும்
இடிச்சத்தம் கேளாத செவியும்
மின்னற் கீற்றைப் பார்க்காத கண்ணும்
பிறவிப்பயனடைவதே இல்லை ...!

எமது நாசியும்
செவியும்
கண்ணும்
இன்று பிறவிப்பயனடைந்தன  ...!

              **************************************************************************************

சூப்பர் சிங்கர்.

ஆரம்பித்துவிட்டார்கள் அடுத்த ரவுண்டை . இன்றைய தேதிக்கு நீயா நானாவையும் , சூப்பர் சிங்கரையும் சிலாகிப்பது என்பது ஒரு Style Statement போல ஆகிவிட்டது . முன்பெல்லாம் நீயா நானா புகழ் கோபிநாத் என்று போடுவார்கள் , இப்பொழுது நீயா நானா புகழ் அராத்து என்று பிளக்ஸ் வைக்கிறார்கள் . அதாகப்பட்டது நிகழ்ச்சி அடுத்த கட்டத்திற்கு போய்விட்டதாம் .

சூப்பர் சிங்கர் இன்னும் கொஞ்ச நாளில் ஒரு பிராண்ட் ஆக உருவெடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை . Flat ல் நாங்கள் டிவி பார்க்கவில்லை எனிலும் முப்பத்தி சொச்ச வீட்டிலிருந்தும் கோரசாக வந்து விழுகின்றது சூப்பர் சிங்கர் ஒலி.

சொந்தமா சுச்ச்சூ போகத் தெரியாத குஞ்சு , குளுவானை எல்லாம் கூட்டி வந்து பாடு பாடுன்னு பாடுபடுத்துகின்றார்கள் நம் பாசத்திற்குரிய தமிழ் அம்மா , அப்பாக்கள் . ஒரு அம்மா வாய் நிறைய புன்னகையோடு சொல்லுது , காலை ஒன்பது மணி குரல் தேர்வுக்கு முதல் நாள் மாலையே வந்து இடம் பிடித்தோமென்று . இரண்டு வருடங்கள் வீட்டிற்கே தனி பயிற்சியாளர் வரவழைத்து பயிற்சி மேற்கொண்டோம் , இன்னொரு வாய்ப்பு கண்டிப்பாக தரவேண்டுமென்று மற்றுமொரு நிராகரிக்கப்பட குழந்தையின் அம்மா – சண்டை போடுகிறார் . டாக்டராக்க வேண்டும் , இஞ்சினியர் ஆக்கவேண்டும் என்ற தமிழ் பெற்றோர்களின் ஆசையில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பது சூப்பர் சிங்கராக்க வேண்டும் , சூப்பர் டான்சர் ஆகவேண்டும் என்ற ஆசையும் . போகிற போக்கை பார்த்தால் வீதிக்கு நாலு ரியாலிட்டி ஷோ பயிற்சி மையங்கள் வந்துவிடும்போல .


போட்டியில் அடுத்த ரவுண்டிற்கு போகவேண்டுமென்ற ஆதீதமான அழுத்தத்தை குழந்தைகளின் மேலே திணிக்கின்றார்கள் . திணிக்கும் திணிப்பில் எல்லாமே வாந்தியாகத்தான் வெளிவருகின்றது. ஓவியம் , பாட்டு , நடனம் போன்ற கலைகளெல்லாம் இயல்பாய் வெளிவந்தால் தான் சிறப்பே . நம்மாட்களுக்கு இது தெரிவதே இல்லை .


இது எங்கே போய் முடியுமென்று தெரியவில்லை . ரியாலிட்டி ஷோ தோல்வியின் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் பத்து வயது குழந்தை தற்கொலைன்னு செய்தி வரும் வரை  நாமளும் சரி , சேனல்சும் சரி திருந்தமாட்டோமென்றே நினைக்கின்றேன் .


என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .



Apr 1, 2014

நிமிர்ந்து நில் ...!






கார்கள் , மரங்கள் எல்லாம் தன்னால தீப்பிடித்துக்கொண்டது ன்னு பேப்பர்ல செய்தி வர்ற மாதிரி , ரோட்டில் நடந்து கொண்டிருந்தவர் திடீரென்று தீப்பிடித்துக்கொண்டு எரிந்தார்னு இனிவரும் காலங்களில் செய்தி வந்தாலும் வரும் . ஆச்சர்யப்பட அவசியமே இல்ல, அடிக்குற வெயிலு அப்படி. அம்மண உடம்புல ஆயில ஊத்தி எரிக்குற மாதிரி இருக்கு  .

போன ஞாயிற்றுகிழமை, ஒரு நொந்த வேலை காரணமாக டவுனுக்கு போயிருந்தேன் . எங்க , அடிக்குற வெயில்ல பாடமாகி ,  மாலைமலர்ல படமாகிடுவோமொன்னு பயத்துல செந்தில் குமரனில் ஒதுங்கினேன் . ரெண்டு ஆப்சன் ஒன்னு குக்கூ , மற்றொன்று பதிவின் தலைப்பு . மண்டையில எதுவுமே இல்லைன்னாலும், பொதுவா மதியக் காட்சி படம் பார்த்தாலே மண்டை பாரமாகிடும் . பட், ஒதுங்க வேற வழியே இல்ல , சரி குக்கூ போலாம்னு பார்த்தா , ஏற்கனவே  ராமு , வமு வில் ஏற்றி வைத்த பாரம் பயமுறுத்த நிமிர்ந்து நிற்பதென முடிவாயிற்று .


செரி , வாங்கோ நிமிர்ந்து நிற்போம் ,

ஆல்ரெடி, நம்ம பதிவ ஜட்ஜுங்க கழுவி ஊத்துன மாதிரியே முதல் பாதி ஜிவ்வு , ரெண்டாவது பாதி ஜவ்வு ...! அதிகாரிகளாலும் , அரசியல்வியாதிகளாலும் பழிவாங்கப்படும் ஒரு சாமான்யன் , எப்படி பொங்கி எழுந்து பொங்கல் வைக்கிறான்ற “CK நாயுடு காலத்து கதைதான்”. (“ Sentence Inspired by Mr.ஆவி”). .

மலர்ச்சியும் , நெகிழ்ச்சியுமான அமலா பாலைதான்  மைனாவிற்கு பிறகு எங்கேயும் பார்க்க  முடியவே இல்லை . மைனாவிற்கு பிறகான அனைத்து படங்களிலும் ,  அம்மணி மூஞ்சி ஆல்வேஸ் Sepia டோனில் தான் இருக்கிறது . மேற்படி படத்திலும் அஃதே . தமிழ் நடிகர்களிலேயே , ரெம்ப மட்டமான DRESSING சென்ஸ் உள்ளா ஆளு நம்ம ரவிதான் . அகா துகா வெல்லாம் அசத்தலா ட்ரெஸ் பண்ணிட்டு இருக்கும்போது , நம்மாளு ஏன் இப்பூடி படுத்துறாருன்னு நிறைய முறை நினைச்சுருக்கேன் . இதே மாதிரி நிறைய பேரு நினச்சுருப்பாங்கோ போல , அதான், ஏன் அங்கிள்ஸ் போடுற சட்டையா போடுறன்னு சந்தோஷ் சுப்பிரமணியத்தில் ஜெனிலியாவை விட்டு கிண்டலடித்திருப்பார்கள் . இந்த படத்தில பரவா இல்ல . 

இரண்டாம் பாதியில் வரும் ஜெயம் கதாபாத்திர சித்தரிப்பு ரெம்ப சுமார் . பொண்ணுங்க ஷாலை உருவி கழுத்துல போட்டுக்குறதும் , கட்டிப்புடிச்சு ஆறுதல் சொல்லுறதும் முற்போக்குத்தனம் போல . நமக்குத்தான் மோசமா தெரியுது .

போலி பத்திரம் தயாரிக்கும் ஒரு பெண் கதாபாத்திரம் படத்தில வருது , அந்த அம்மணியோட உடல் மொழியும் சரி , உடைகளும் சரி , வசன உச்சரிப்பும் சர் class class class ...! ஆரம்பத்துல சூரி டாவடிக்குற மாதிரி கட்டுனாங்க . எங்க , கிளைமாக்ஸ்ல ரெண்டு பேரு கண்ணும் சந்திக்குற மாதிரி எதுனா சீன் வச்சுடுவாங்களோன்னு பதறிப்போயிருந்தேன் . நல்ல வேளை அப்டி எந்த அசம்பாவித சீனும் இல்ல . சூரி முதல் பாதி காமெடியில் கலகலக்க வைக்கிறார் , பின் பாதி குணச்சித்திரத்தில் கண்ணை மட்டும் கலங்கலாக வைத்திருக்கிறார் .

பொறி பறக்கும் வசனங்கள் புல்லரிக்க வைக்குது . படத்தில self corruption அப்டிங்க்குற ஒரு சொல்லாடல் கையாளப்பட்டிருக்கு . அந்த ஒரு சொல்லும் அதைதொடர்ந்து வரும் வசனமுமே போதும் நான் குடுத்த அம்பது ரூவாய்க்கு . மற்றபடி ,படத்தில கனி சார் பண்ணுன ஒரே மிஸ்டேக்கு , அதுவும் கிரிமினல் மிஸ்டேக்கு – பாடல்கள்.

என்னதான் ஆயிரம் நொட்டை சொன்னாலும் , என்னளவில இந்த மாதிரி படங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தமிழில் வந்துட்டு இருக்கனும்னுதான் எதிர்பார்க்கிறேன் . இல்லன்னா ,ஆஸ்பத்திரியின் பிரசவ அறையில் குழந்தையை பார்ப்பதற்கு கொடுக்கும் அம்பதும் , பிணவறையில் சடலத்தை பார்ப்பதற்கு கொடுக்கும் நூறும் லஞ்சமென்றே தெரியாமல் போய்விடும் அடுத்த தலைமுறைக்கு.



என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .


Mar 26, 2014

தண்ணீர் - கண்ணீர் ...!





"நாக்கு இல்ல , நாடி நரம்பெல்லாம் வறண்டு போகப்போகுதுடா ...!"

ஊரிலிருந்து திரும்பி வந்த அம்மா சொன்ன வார்த்தைதான் இது . ஒட்டு மொத்த தமிழகமே தண்ணீர் பஞ்சத்தை நோக்கி காட்டாற்று வெள்ளம் போல முன்னேற , எங்கள் சிவகங்கைச் சீமை அதற்கும் ஒரு படி மேலே வேகமாக சென்றுகொண்டிருக்கின்றது .

ஆற்றுப்பாசனமோ , வாய்க்கால் பாசனமோ ஏதொன்றும் இல்லை . வானம் பார்த்த பூமி , இப்பொழுது வானத்தையும் பார்க்க முடியாததாகி தகிப்பது பெருங்கொடுமை . சிவகங்கை மாவட்டத்தின் எல்லைக் கிராமம் பூலாங்குறிச்சி தான் எங்கள் ஊர். தண்ணீர் வசதி ஏதுமில்லாத போதும் , இயற்கையிலேயே அமைந்த மலைகளும் , அதிலிருந்து வரும் ஊற்றுகளும் , மூதாதையர்கள் நுட்பமுடன் அமைத்த ஒன்றை ஒன்று தொடர்புடைய குளங்களும் , ஊருணிகளும் இது வரை காப்பாற்றியது .

மினரல் வாட்டரெல்லாம் வருவதற்கு முன்பே எங்கள் ஊர் தண்ணீர் அக்கம் பக்கத்து ஊர்களில் மினரல் வாட்டர் கணக்காக விற்கப்பட்டது . பொன்னமராவதியிலோ , கொப்பனாபட்டியிலோ இல்லை அக்கம் , பக்கம் உள்ள ஏதேனும் ஒரு கிராமத்திலுள்ள வீட்டில் குடிக்க பூலாங்குறிச்சி தண்ணீர் தந்தார்கள் என்றால் , அவர்கள் கொஞ்சம் வசதி படைத்தவர்கள் என்று அர்த்தம் . அனுதினமும் அதிகாலையிலும் , அந்தி மாலையிலும் அக்காக்களும் , அண்ணன்களும் சாரை சாரையாக மிதிவண்டியில் ரப்பர் டியூபுடன்  , பிளாஸ்டிக் குடங்களுடனும் தண்ணீர் சுமந்து செல்வார்கள். முறையே வீடுகளுக்கும் , விற்பதற்கும் . இப்படி இருந்த ஊரில் இன்று மினரல் வாட்டர் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள் .

கேணிக் கயிறு , வாளியை எல்லாம் கழற்றி வைத்துவிட்டு , எங்கள் வீட்டு கிணற்றில் மொந்து குளித்த நாட்கள் எல்லாம் போய் இன்று இரண்டு செட் கயிறு வாங்கி பிணைத்து இறைத்துக் கொண்டிருக்கிறோம் . அப்படியே இறைத்தாலும் , வாளியில் வரும் தண்ணீரை விட உடம்பில் இருந்து வெளியேறும் வியர்வை நீர் தான் அதிகமாக இருக்கின்றது . ஆடு , மாடுகளெல்லாம் அடிமாட்டுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது . வெயில் மழை பொழிந்து கொண்டிருக்கின்றது.

பொதுவாக விவசாயம் தவிர வேறெந்த தொழிற் வாய்ப்பும் , வசதியும் இல்லாத தேய்ந்த தென் மாவட்டமான எங்கள் மாவட்டத்தில் வீட்டுக்கொருவர் மலைசியாவிலோ, சிங்கப்பூரிலோ கொண்டுவிற்கப் போயிருப்பார்கள் . என் உடன் படித்த நண்பர்களில் என்பது சதவீதத்திற்கும் மேலே மேற்படி ஊர்களில் தான் வாழ்கிறார்கள் இல்லை பிழைக்கிறார்கள்  . இப்பொழுது இந்த நிலைமை மாறிவிட்டது , வீட்டிற்கு ஒருவர் இல்லை இருவராகிவிட்டனர் . போகிற போக்கில் ஒட்டு மொத்த சிவகங்கை மாவட்டமும் சிங்கைக்கோ , மலைசியாவிற்கோ புலம் பெயர்ந்தாலும் ஆசார்யப்படுவதற்கில்லை .ஆனால், அப்பொழுதுகூட எங்கள் தொகுதி மாண்புமிகு ஏதோவொரு கிராமத்தின் ATM ஐ திறந்து கொண்டு, இந்தியா வளர்ந்துகொண்டிருக்கிறது என்பார் .

வைரமுத்து சொன்ன தண்ணீருக்கான மூன்றாம் உலகப்போர் வரும் தலைமுறையில் அல்ல , நம் தலைமுறையிலேயே வரப்போகின்றது . வெகுவிரைவில் , நீங்களும் , நானும் தண்ணீருக்காக கட்டிப் புரண்டு சண்டை போடப்போகின்றோம் .

திரையரங்குகளில் காண்பிக்கப்படும்  “நான் தான் முகேஷ் “ என்ற விளம்பரப் படத்தில் புகையிலைக்குப் பதிலாக தண்ணீரையும், பாடப் புத்தகங்களில் தீண்டாமைக்குப் பதிலாக விளை நிலங்களை , விலை நிலங்களாக்குவது ஒரு பாவச் செயல் என்று போடும் நாள் வந்துவிட்டதென்றே நினைக்கின்றேன் . அரசுகளையும் , அதிகாரிகளையும் குறைசொல்வதை விட்டுவிட்டு  , ஒவ்வொரு தனி மனிதனும் தன்னளவில் தண்ணீரின் அவசியத்தையும் , முக்கியத்துவத்தையும் உணர்ந்தாலொழிய தண்ணீருக்காக சிந்தப்போகும் செந்நீரை யாராலும் தடுக்கவோ / தவிர்க்கவோ முடியாது

நீ எதிர் பார்க்கும் மாற்றத்தை உன்னில் இருந்தே ஆரம்பி என்று சொல்வார்கள் . அதன்படி , என்னால் முடிந்த அளவு தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென்றும், மக்காத பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக மஞ்சள் பைகளையும் , கட்டை பைகளையும் பயன்படுத்த வேண்டுமென்று முடிவெடுத்து அதன்படி நடக்க ஆரம்பித்துள்ளேன் . கண் கெட்ட பிறகான சூரிய நமஸ்காரம் தான் ... கண்ணோடு போகட்டுமே என்ற எண்ணத்தில் எடுத்த முடிவு .

செலவழிக்கும் ஒவ்வொரு அதிகபட்ச தண்ணீர் துளியும் , தண்ணீர் கிடைக்காமல் நாக்கு, நாடி, நரம்பெல்லாம் வறண்டு போய் மாண்டு போன யாரோ ஒருவருடைய செந்நீர் என்றும்  . பிளாஸ்டிக் பைகளை கைகளில் தொடும்போதெல்லாம் , தண்ணீர் இல்லாமல் மாண்டு போன ஒரு குழந்தையின் சடலத்தை தொடுவது போலவுமே உணர்வதாக கற்பிதம் செய்து கொள்கின்றேன் நான் . நீங்கள் ......?

நாக்கு இல்ல , நாடி நரம்பெல்லாம் வறண்டு போகப்போகுதுடா ....!

என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .



Mar 20, 2014

பேசாத வார்த்தைகள் : விஜய் , குக்கூ , டூர் & ட்வீட் .






நடிகர் கம் பாடகர் வரிசையில் உலக நாயகனுக்குப் பிறகு இளைய தளபதி குறிப்பிட்டுச்சொல்லக் கூடியவராகிறார் . சாமீபத்திய ஜில்லா “படத்தின் கண்டாங்கி கண்டாங்கி” பாடலில் தலைவி ஷ்ரேயாகோஷால்உடன் பாந்தமாக பாடியிருக்கிறார் . காஸ்ட்யூமும் , காட்சி படமாக்கப்பட்ட இடங்களும் பாடலுக்கு பொருந்தாத போதிலும் , தளபதியின் குரலிலும் , நடனத்திலும் அப்டியொரு வசீகரம் .

**********************************************************************************************************************************************************

புதுப்படங்களில் கவன ஈர்ப்பு செய்யும் பாடல் - குக்கூ படத்தின் , “கல்யாணமாம் கல்யாணம்” . வழக்கமான காதல் தோல்வி சிச்சுவேசன் பாடலென்ற பொழுதிலும் , கவன ஈர்ப்பு செய்வது இசையும் , குண்டடித்த எம்.ஜி.ஆரும் , பூசினாற்போல வரும் சந்திரபாபுவும் தான்  . சந்திரபாபுவை பார்க்கும் போது அவ்வளவு பரவசமாக இருக்கிறது . நம்பியார் , ரகுவரன் , நாகேஷ் போன்று மறக்க முடியாத நடிகர்களில் சந்திரபாபு முதன்மையானவர் .


**********************************************************************************************************************************************************


அலுவலக டூரில் , எந்தெந்த ஊர்களுக்கு செல்வதென்பதை முடிவு செய்யும் பொருட்டு பொதுக்குழுவை கூட்டி இருந்தார்கள் .  கடவுளின் தேசத்திற்கு போகலாமென நான் உள்பட நால்வர் கை தூக்க . தண்ணீர் தேசத்திற்கு போகலாமென நாற்பதுக்கும் மேற்பட்டோர் கைகள் , கால்கள் என மொத்தமாக தூக்க , நால்வருக்கும் டெப்பாசிட் காலி . என்னென்னமோ சொல்லி கேன்வாஸ் பண்ணினாலும் எடுபடவில்லை . வேணும்னா , இரண்டு அணியாக பிரிந்து  முதல் அணி பாண்டிக்கும் , இரண்டாவது அணி வீகாலேண்டுக்கும் போகலாமென ஒருவர் ஐடியா கொடுக்க , நமக்கு அடிவயிறே கலங்கிவிட்டது . பின்னே , மூணு படி மேலேறி , கீழே பார்த்தாலே நமக்கு தலையும் தரையும் சேர்ந்து சுத்தும்  இதில் வீகாலேண்ட், ஜெயண்ட்வீல்னு பேரக்கேட்டாலே டரியலாகுது. ஆணி புடுங்கவே வரலையப்பாவென்று கூறி வெளிநடப்பு செய்தாயிற்று . என்னவொன்னு டூர் போயிருந்தா, அப்படி இப்படின்னு  ஒரு அஞ்சாறு பதிவும் , ஏழெட்டு FB ஸ்டேட்டசும் தேத்தியிருக்கலாம் J விதி வலியது .....!

**********************************************************************************************************************************************************

தமிழனுக்கு தெரிந்ததெல்லாம் ரெண்டே திசைகள் தான் , ஒண்ணு நார்த் மற்றொன்று சவுத் . ஈஸ்ட் , வெஸ்ட்டெல்லாம் என்ன பாவம் பண்ணுச்சோ . / நான் தமிழன் /


ஜீவன்பேஷனில் : ஜீவன் பேஷன் : கோடைக்கேற்ற ஆடை - லினன் ( LINEN)



என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .