Oct 22, 2013

விஜய் டீவி - மகாபாரதம் டூ ஆபிஸ் ....!






"திருமணமாகி சிங்கிள் பெட்ரூம்ல குடியிருக்குற ஓர் ஆண்மகனுக்கு மட்டும்தான் சீரியல் பார்ப்பதின் வலி தெரியும் ....!".


சீரியல் :

எல்லா சேனல்களிலும் ஜவ்வு மிட்டாயாக சீரியல்களை இழுக்க , விஜயில மட்டும் பஞ்சு மிட்டாயாக சீக்கிரம் கரைந்துவிடும் சீரியல்கள் ரெம்ப நல்லா இருந்தது . பட் இப்ப இங்கயும் ஜவ்வா இழுக்க ஆரம்பிச்சுட்டாங்க .

சரவணன் மீனாட்சி :

கல்யாணத்துக்கு ஒரு வருஷம் , அப்புறம் குழந்தை பிறக்குறதுக்கு அடுத்த ஒரு வருசம்னு இழுத்தடிச்சவுங்க இரெண்டே எபிசோடுல இருவது வருசத்த தாண்டினது பெரிய சோ(சா)தனை .
(சரவணன் & மீனாட்சி மகனுக்கு பொண்ணு பார்க்குறாங்கப்பா ... மிடில ...). வெகு விரைவில் முடியபோகுதாம் . அப்பாடா ....!

தாயுமானவன் :

அஞ்சு பொண்ணுங்க ஒரு அப்பா ...! வாரா வாரம் ட்விஸ்ட் & டர்ன் ன்னோட பரவா இல்லாம போயிட்டுருக்கு . பாரதி ன்னு ஒரு கேரக்டர் எ.எ ஜெய் மாதிரி அஞ்சு மடங்கு அப்பாவி & அப்புறம் ஒரு அழுகாச்சி அப்பா ..! மகா & கல்யாணி நல்ல நடிப்பு .

ஆபீஸ்  :

மரண மொக்கையான ஒரு நாடகம் ....! எந்தெந்த கலர்களில் பிளைன் சர்ட் மார்க்கெட்ல இருக்கும்னு இந்த நாடகத்த பார்த்தா தெரிஞ்சுக்கலாம் . ஆண்கள் எல்லாம் ஏசியன் பெயின்ட் விளம்பர மாடல் மாதிரியே சுத்தினு திறியுராங்கப்பா ....!

மகாபாரதம் :

சின்ன வயசுல பிளாக் அன்ட் ஒயிட்ல  டி.டி ல பார்த்தது . இப்பொழுது ரெம்ப கலர்ஃபுல்லா விஜய் ல ஆரம்பிச்சுருக்காங்க . ரிச்சான ஒளிப்பதிவு , சூப்பரன கிராஃபிக்ஸ், நல்ல நடிகர்கள் , அருமையான லொக்கேசன்ஸ் & செட்ஸ் , அழகான தமிழ் வசனம்னு ரெம்பவே நல்லா போயிட்டுருக்கு . என்ன ஒன்னு ஏழு மணிக்கு போடுறாங்க ....! நெறைய நாள் பார்க்க முடிவதில்லை . எட்டு , எட்டரை மணிக்கு மேல போட்டா பரவா இல்ல , இன்னும் நெறைய பேரு பார்க்கலாம் ....!

ஆச்சி தமிழ் பேச்சு :
                        ரெம்ப நல்ல நிகழ்ச்சி . தமிழ்ல பேசுறதுனா தூய தமிழ்ல்ல தான் பேசணும்னு நினைக்குறவங்களுக்கு நெல்லை கண்ணன் அவர்கள் பேசும் ஆங்கில கலப்பில்லா எளிய பேச்சுத்தமிழ் நல்ல உதாரணம் . அடுத்தடுத்து அவர் மேற்கோள் காட்டும் குறள் , கவிதை , சங்க இலக்கியம் , சமகால நிகழ்வுகளின் நக்கல்கள்  ன்னு நிகழ்ச்சியின் ஆதாரமே அவர்தான் . தமிழ் கடல்னு ரெம்ப சரியாத்தான் பட்டம் கொடுத்துருக்காங்க . பங்கேற்பாளர்கள் கூட அவர்மேல அளவுகடந்த மரியாதையையும் , அன்பையும் வைத்திருக்கின்றார்கள் . பாராட்டோ , திட்டோ உணர்வுகளை உடனே வெளிப்படுத்திவிடுவது அவரது மற்றுமொரு சிறப்பு .

என்னாச்சுன்னு தெரியல கடந்த இரண்டு வாரமா நெல்லை கண்ணன் அவர்களுக்கு பதிலாக தமிழச்சி தங்கபாண்டியனும் & வழக்கறிஞர் அருள்மொழியும் நடுவர்களாக வந்திருக்கின்றார்கள் . நடுவர்கள் ஆங்கில கலப்போடு பேசுவது நிகழ்ச்சியின் முரண் . நிச்சயமா நெல்லை கண்ணன் ஐயா இல்லாமல் நிகழ்ச்சி கொஞ்சம் இல்ல நல்லாவே தடுமாறுது  .......! தமிழ் கடலுக்கு இணையா வேறு யாரை போட முடியும் ..?

தொகுப்பாளர் சூர்யா அழகான கவிதை, நாசூக்கான கேள்விகள் னு இப்ப அசத்த ஆரம்பிச்சுருக்கார். .
ஜோடி :
         குடும்பத்தோட பார்க்கும் நிகழ்ச்சின்னு விளம்பரத்துல சொல்றாங்க . ஆனா குடும்பத்துல இருக்குறவங்க எல்லாம் தனித்தனியாத்தான் பார்க்கணும் அவ்ளோ அசிங்கமான அசைவுகள் & இரட்டை அர்த்தம்  . ரோபோ சங்கர் பண்றதெல்லாம் டான்ஸ் இல்ல அதுக்கு பேரு ..............................!

சூப்பர் சிங்கர் :

சூப்பர் சிங்கர் - தமிழகத்தின் தூக்க மாத்திரை ...!

கொஞ்ச நாளா ஒதுக்கி வச்சுருந்த நெஞ்ச .........ற செண்டிமென்ட்ஸ் ஸ மறுபடியும் அரம்பிச்சுட்டாங்க. சூப்பர் சீனியர் அல்கேட்ஸ் ஐ நல்ல மரியாதையோடு (டைரக்ட் வைல்ட் கார்டு வாய்ப்போடு ) போட்டியில் இருந்து நீக்கியது பாராட்டுக்கு உரியது .

ரெண்டு வாரத்திற்கு முன் நடந்த பக்திப்பாடல்கள் சுற்று நல்லாருந்துச்சு , பட் போன வருஷம் ஜூனியர்ஸ் பாடுனபோது இருந்த வைப்ரேசன் இந்தவருசம் மிஸ்ஸிங் . இந்த வாரம் ராஜா ஹிட்ஸ் .

MY WISH LIST …

திவாகர் .
ஆந்திராகாரு .
பார்வதி .
தீப்தி .
அல்கேட்ஸ் / ரமேஸ் .

போட்டியில் ஜெயித்தாலும் , தோற்றாலும் திவாகரின் குரலை அடுத்த தலைமுறை நடிகர்களின் ஒப்பனிங் சாங்கில் கேட்கலாம் .


என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .




Oct 14, 2013

ஒரே ஞாபகம் – AWESOME டீசர் & ஐயர் சிஸ்டர்ஸ் HONEY VOICE & SHNKAR TUCKER’S SOOTHING CLARINET...!




இசை அறிவோ , INSTRUMENT’S & திரை மொழி அறிவோ இல்லாத ஒரு C செண்டருக்கும் கீழே உள்ள ரசிகன் தான் நான் . எங்கேயாவது எப்பயாவது அட போடும் பாடல்களையோ , படங்களையோ பார்த்தால் , கேட்டால் அதை சலிக்கும் வரை திரும்ப திரும்ப பார்க்கும் & கேட்கும் பழக்கம் உள்ளவன் . அப்படி அட போட வைத்த மூன்று பாடல்கள் & ஒரு டீசர்  இங்கே ....!

லோக்கல் சேனலில் கடந்த சில நாட்களாக இரண்டு பெண்கள் பாடும் ஆடியோ மேக்கிங்கை பார்க்கவும் , கேட்கவும் நேர்ந்தது ... BUT , யாரு என்ன படம்னு ஒன்னும் தெரியல... எப்டி தேடுவதுன்னு தெரியாமல் அப்டியே விட்டுட்டேன் . இன்று வே.மதிமாறன் அவர்களின் ஒரு பதிவை படிக்கும் போதுதான், அவர்கள் வித்யா & வந்தனா ( ஐயர் சிஸ்டர்ஸ் ) ங்குறது தெரிஞ்சு யூ டியூப்ல தேடிப்பிடித்தேன் .....!

தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது முதலில் வசீகரித்து நிலவு போன்ற வட்ட முகம்தான்...OMG...! இரண்டு பாடல்களை கேட்டேன் முதல்ல மீசை கவிஞனின் “ஆசை முகம் மறந்தேனடி” தமிழ் உச்சரிப்பு ரெம்ப மோசம்னு மதி-ஜி எழுதியிருந்தபடி  ஆஸ்சை முகமென்று ஆரம்பிக்கின்றார்கள் . BUT அழகான பெண்கள் (தமிழ் )கொலை செய்தால் கூட கொஞ்சுவது போலதானே...? எனக்கு கொஞ்சுவது போல தான் உள்ளது  ....!





இரண்டாவது பாடல் “நீ நினைந்தால் ஆகாததும் உண்டோ “ அடடா என்ன ஒரு SOOTHING ஆனா இசைகோர்ப்பு ....! பாடல் வரிகள் யாரென்று தெரியவில்லை . இசை – பெரியசாமி தூரனாம் . வாழ்த்துக்கள் அவருக்கு .



ரெண்டு பாடல்களிலும் மிக முக்கியமான ஒருவருக்கு பங்குண்டு அவர் – SHANKAR TUCKER அமெரிக்கன் CLARINET & MUSIC COMPOSER. நம்மூர் நாதஸ்வரம் மாதிரியான ஓர் இசைப்பானை ஊதுகிறார் பாருங்க .....அட அட அட டா .... AWESOME ...AWESOME.....! பேரைபோலவே சங்கர் டக்கர்யா  ...!

சங்கர் டக்கர் , இயக்குனர் ராதாமோகனின் அசிஸ்டன்ட்  விக்னராஜன் இயக்கிக்கொண்டிருக்கும் “ஒரே  ஞாபகம்” படத்தின் மூலம் தமிழ் படங்களுக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் . ஜி.வி & அனிருத் அலர்ட்டா இருங்கப்பா .....!

ஒரே ஞாபகம் டீசர் ஐ தேடிப்பிடித்து பார்த்தேன் . அட்டகாசமான விஷுவல்ஸ் ...! அழகு ....! அழகு ....! டீசர் பார்த்தா எதிர்பார்ப்பு எகிறுது .... படத்தில் பெரும்பாலும் புதுமுகங்கள்  ...!  CINEMATOGRAPHY A.M EDWIN SAKAY இவர் எந்திரன் மேக்கிங்கின் ஒளிப்பதிவாளராம். வாழ்த்துக்கள் எட்வின் & ஒரே ஞாபகம் டீம் .



என்றென்றும் புன்னகையுடன் J


ஜீவன்சுப்பு ....!



Oct 10, 2013

வலைப்பூ திறப்பு விழா அழைப்பிதழ் ....!






ஜீவன் பேஷன் ஸ்டுடியோ ங்குற பேர்ல புதிதாக ஒரு வலைப்பூ ஆரம்பித்திருக்கின்றேன் ....! அனைவரும் அவ்வப்போது வந்து போகவும் ...!


என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .



















Oct 7, 2013

ட்வீட்ஸ் - ரிசல்ட், பரத் , ஆயுத பூஜை , தமிழ்மணம் , கவிதை , தமிழ் , கிரிக்கெட் .








அரியர் வைக்காதவனெல்லாம் அறிவாளியுமல்ல , அரியர் வச்சவனெல்லாம் முட்டாளுமல்ல.
// FACTட்டு ...! FACTட்டு ...! RESULTட்டு ...! RESULTட்டு ...!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

HARD WORK (N) EVER FAILSஅருண்விஜய், ஆதி, பரத், ஷ்யாம். // உதாரண புருஷர்கள் //

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இப்பொழுதெல்லாம் ஆங்கிலத்தை அப்பிடியே “டமில்”படுத்துவதுதான் தமிழாக அறியப்படுகின்றது.  // “வாட் எ கொடும சார்” ...? //

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கிரிக்கெட் தெரிந்த பெண் மனைவியாக வாய்க்கப்பெற்றவர்களெல்லாம் வரம் வாங்கி வந்தவர்கள்.
// முழுசா ஒரு ஓவர் கூட பார்க்க முடியல யுவர் ஆனர்ஸ் //

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மூன்று புள்ளி ஓர் ஆச்சர்யக்குறி ...!
முரண் –
பிரதமர்
சுதந்திர தின உரை
கூண்டுக்குள்...!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்த வருஷ ஆயுத பூஜை ஞாயிற்றுக்கிழமையில் . // அடடா ...! லீவு போச்சே...! //

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பதிவை தமிழ்மணத்தில் இணைத்து முடித்தவுடன் , “சன்னலை மூடு” என்று வரும் தகவல், நீ என்னெத்த பெரிசா எழுதி கிழிச்சுட்ட “......... போடான்னு” சொல்ற மாதிரியே ஒரு ஃபீலிங் .....!
// நாங்களும் அவதானிப்போம்ல...! //

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

FACE BOOK STATUSக்கு, பின்னூட்டமாக வரும் TEXT COMMENTஐ விட, PICTURE COMMENT அதகளமா இருக்கு....! பிளாக்குலயும் PICTURE OPTION கொண்டுவாங்க ராசா நல்லாருப்பீங்க..!// ரிக்வொர்ஸ்ட்டு//


என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .


Oct 2, 2013

“மினி” பதிவர் சந்திப்பு ...!






தலைப்புக்காக மட்டுமே இங்க வந்திருக்கும் அந்த நாலு நல்லுள்ளங்களுக்கு நாலுவாட்டி நன்றி ...!

இரண்டு, மூன்று முறை தள்ளிப்போன “கோவை ஆவி”யுடனும் , “பாலுஜி”யுடனுமான  சந்திப்பு , சென்ற மாதத்தின் ஒரு சுபயோக சுபதினத்தன்று சுபமானது . பஜ்ஜி , சப்ஜி தெரியும் அது என்ன பாலுஜி அப்படின்னு கேக்குறீங்களா…! அவர்தாங்க  நம்ம “மின்னல் வரிகள் பாலகணேஷ்” ஜி ...!
(எப்பேர்ப்பட்ட “பெரிய” மனிதர்களை சந்திச்சுருக்க , இதப்போயி “மினி” பதிவர் சந்திப்புன்னு சொல்ற, ACTUALLY இத நீ “மெகா” பதிவர் சந்திப்புன்னு தானே சொல்லனும்னு நீங்க கேட்குறது புரியுது யுவர் ஆனர்...! ).

சரியாக ஐந்து மணிக்கு சிங்கை SIGNAL க்கு  வருகிறேன் என்று உறுதியளித்து , சொன்னபடியே மிகச்சரியாக ஆறுமணிக்கு சென்று என் உறுதியை அழித்தேன் .  JUNCTION நடைபாதையில் நின்னு நாலு பக்கமும் சுழன்று சுழன்று பார்த்தாலும் கண்ணுக்கெட்டுன தூரம் வரை நம்ம ஜீவன்களை  காணவில்லை ...! கண்ணுக்கு தெரியாத உருவங்கள் இல்லையே நம் ஜீவன்கள் , எங்க போனாங்க ...! சரி, போஃனிப்பார்க்கலம்னு , போஃனெடுத்து அல்லோ...! அல்லோ...! அல்லோ...! ன்னு கூவுனா , நடைபாதை கடைக்காரர் , யாரடா இவன்...? ஜெபக்கூட்டத்துல சொல்ல வேண்டியத JUNCTION ல நின்னு சொல்லிட்டு இருக்காங்குற மாதிரி பார்த்தார் ...! நல்ல வேளை “அல்லோ ஆவின்னு” கூப்பிடல , இல்லாங்காட்டி எதிர்த்தாப்புல இருந்த A 3 POLICE STATION ல  தள்ளிருப்பாங்க ....! நல்லா வைக்குறாங்கய்யா பேரு “ஆவி” , “ஸ்கூல் பையன்”னு ....!

கொஞ்சம் தள்ளி நின்னு மறுபடி கூவ ஆரம்பிச்சேன் , சத்த நேரத்துல “யோவ் யோவ்” ன்னு அன்பான!? ஒரு குரல் ....! கடைக்காரர் தான் கான்ட்டாயிட்டோரோன்னு திரும்பி பாத்தா... அட நம்ம “பாலுஜி” ...! மகிழுந்தில் இருந்து அகமகிழ்ந்து அடியேனை அழைத்துக்கொண்டிருந்தார். அதிவேகத்துல போயி அண்ணேன் எப்புடி இருக்கீக ன்னு ஜன்னல் வழியே கைநீட்டி  , அப்டிக்கா தலையையும் சேர்த்து ஓட்டுனர் சீட்டுல இருந்த ஆவிக்கும் நீட்ட, ஆவி அரண்டுபோயிட்டார். யோவ் மொதல்ல வண்டில ஏறுய்யா ...இல்லாங்காட்டி வண்டியோட சேர்த்து மாநகராட்சி ரதத்துல ஏத்திருவாய்ங்க....! (சொந்த வண்டி வச்சுருக்கவனுக்கு மட்டுமே தெரியும் ட்ராபிக் போலீசின் அருமை ....! ) ஆவியின் ஆணைக்கிணங்க வண்டி ஏறினேன் .

வண்டில ஏறுன பிறகு, ஆவி மட்டும் ரெண்டு வாட்டி என்னைய திரும்பி, திரும்பி பார்த்தாப்புல ...!
என்னய்யான்னு கேட்டா ... இல்ல புரோபைல் போட்டோவுல வேற மாதிரி இருந்தீரு ... அதான்ன்னு இழுத்தார்  ...! போதாக்குறைக்கு நா வேற மங்கூஸ் கட்டிங் போட்டுகினு , மீச , தாடியெல்லாம் வளிச்சுட்டு நாதஸ்வரம் வாசிக்குற ட்ரூப்புல இருந்து தப்பி வந்த மாதிரியே இருந்தனா ... பயபுளைக்கு, உண்மையிலே இவன் அவன்தானான்னு டவுட்டு ...! இப்டில்லாம் டவுட்டு படுவாருன்னு தெரிஞ்சுருந்தா கையோட ஒரு நசிரியா படம் எடுத்துனு போயிருந்துருப்பேன் ....!

அல்லோ ஆவி ...! புரோபைல் படத்த வச்சுக்கினு ஆளுகள அடையாளம் காணமுயற்சி செய்றதுங்கறது   , கம்ப்யூட்டர்ல வரஞ்ச படத்த வச்சுக்கினு தீவிரவாதிய தேடுறமாதிரி ...! நம்மளால கண்டே புடிக்கமுடியாது , அவனா வந்து மாட்டுனாதான் உண்டு ....! என்ன புரிஞ்சுதா ...?

தொடர்ந்த பயணத்தின் வழியில் “நாயகன்” பட வசனத்தை எம்மிடம் கேள்வியாக வைத்த ”பாலுஜி” க்கு “ஆளவந்தான்” பட வசனத்தை பதிலாக உரைத்தேன் .

“ஆவி வீட்டுக்கு” போனவுடன் , ஆவி பறக்க காஃபி இல்லாட்டி குளிர்பானம் தருவாருன்னு பார்த்தா, மனுஷன் லேப்டாப்ப தொறந்து நசிரியா பாட்ட போட்டுட்டு , பாருங்க பாஸ்  ரெம்ப அழகா இருக்கும்குறாப்புல  ....! அட ஆண்டவா  ...! என்ன மாத்த்ரி சம்மூகத்துல வாழ்ந்துட்டு இருக்கோம் ....?

ஆவி & பாலுஜி - ஒரு சிறு குறிப்பு : 

                            ACTUALLY இருவருக்கும் “பெரிய” குறிப்பு தான் எழுதணும் . BUT, நம்மளால “தி.கொ.போ.சீ” அளவுக்கெல்லாம் “விலா”வாரியா எழுதமுடியாது  . SO, “விரல்”வாரியா ஒரு சிறு குறிப்பு ....! J

இடி இடிக்கும் சிரிப்பு
வெடி வெடிக்கும் பேச்சு
குறுகுறுக்கும் பார்வை 
தததடக்கும் வேகம்...
இதுதான் ஆவி ....!

ஆவியை போலவே அவர் மனசும் ரெம்ப ...... . ஆவியிடமிருந்து மிக விரைவில் நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றை எதிர்பார்க்கலாம் ...கலாம் ...லாம்...ம் ...!

பாலுஜி – அவர் எழுத்தை வா”சிக்காம” ஆளை மட்டும் பார்த்திருந்தா கொஞ்சம் அரண்டு போயிருப்பேன் ....! என்னா “LOOK”க்க்க்கு...! மனுஷன் LOOKக்க பார்க்கும்பொழுது திக்கான டிக்காஷன் மாதிரி இருந்தாலும் , பேச்சுல  , பசுமாட்டு பால் மாதிரி அப்டி ஒரு வெள்ளந்தித்தனம்  ...!

பொன்னியின் செல்வனிலிருந்து ஒரு வசனத்தை பேசிக்காட்டினாரு பாருங்க ....! சான்சே இல்ல ....! AAAAAWESOME...! ஒருவேள உண்மையாகவே இப்டிதான் இருந்திருக்குமோ ங்குற அளவு அட்டகாசம் ...! பதிவ இயக்குனர்களே ...! அருமையான குணச்சித்திர நடிகரை மிஸ் பண்ணீடாதீங்க ....!

பொன்னியின் செல்வனை ஒலிச்சித்திரமாக கொண்டுவரலாம் என்ற பழைய பேச்சுவார்த்தை  பேச்சாகவே இருக்கின்றது என்று  பரஸ்பரம் ஆவியும் , பாலுஜியும் பேசிக்கொண்டபோது தெரிந்து கொண்டேன். ஆகப்பெரிய மெனக்கெடலும் , ஆர்வமும் , பயிற்ச்சியும் , நேரமும் தேவைப்படும் ஒரு சவாலான விஷயம் அது . பாலுஜி , ஆவி , தி.கொ.போ.சீ , பிபி , ஸ்.பை ,DDD ,ரூபக் , அரசன் ..... SO & SO..... இவர்களைப்போன்ற ஆர்வமும் , திறமையும் கொண்டவர்கள் முயற்சி செய்தால்  ஒலிச்சித்திரத்தை ஒலிக்கவிடலாம் . நிச்சயம் அது பதிவர்களின் திறமையை பறைசாற்றும் விதமாக அமையும் ...! 


OKAY ….! இப்பவே ரெண்டு பக்கத்த தாண்டிடுத்து ...! எல்லை தாண்டிய தீவிரவாதம் நல்லதுக்கில்லை என்பதால் இத்தோட பதிவர் சந்திப்பு முடியுது ....! முடியுது ...! மூணாவதா நீங்களே சொல்லிக்குங்க பாஸ் .....!

டிஸ்கி(!?) : நகைச்சுவையும் , திகிலும் கலந்த ஒரு CRIME நாவல் எழுதுவது சம்பந்தமாக பாலுஜியும் , ஆவியும் தீவிரமாக பேசிகொண்டிருந்தார்கள் . ஊரோடு ஒத்து வாழ்வது தானே உத்தமம் ....! செரி, நாமளும் CRIME தொடர் எழுதலாம்னு நினைக்கும்போதே , மனஸ் மண்டையிலே தட்டி சொல்லுது ..... மகனே நீயெல்லாம் எழுதுறதே CRIME தான் ... இதுல தனியா வேறயாக்கும்னு .....! OKAY ன்னு அப்டியே விட்டுட்டேன் ....! NO NO .... எழுதச்சொல்லி போராட்டம்லாம் நடத்தப்புடாது ..ப்புடாது ...! ப்புடாது...!

ஏன்னா....!

நானெல்லாம் மனச்சாட்சியோடு வாழ்பவன் .....!


என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .