ஆனி போயி ,ஆடி போயி ஆவணி வந்தா
எம்மகன் டாப்பா வாந்துடுவான்னு பட்டிக்காட்டு ஜோசியர் சொல்லிருக்காருன்னு களவாணி படத்தில்
சரண்யாம்மா சொல்லியதைப்போலவே , முப்பத்தி ஒன்னு போயி , முப்பத்தி இரண்டும் போயி முப்பத்தி
மூணுல நீ ஓஹோன்னு வருவேன்னு நம்மூரு விட்டி அய்யர் சொல்லீருக்காருடான்னு , விட்டி அய்யரிடம்
ஜாதகம் பார்த்த கடந்த நான்கு வருடங்களாக அம்மா சொல்லிக்கொண்டிருந்த அந்த முப்பத்தி
மூன்று இதோ இன்னிக்கு வந்திட்டு J ....!
கடந்த வருடம் ஆரம்பம்
முதல் போன வாரம் வரை ஆப்ரேசன் , ஆஞ்சியோ , ஆஸ்பிட்டல்ன்னு ஒரே அலைச்சலும் , மன உளைச்சலுமாகவே
போயிட்டு...! இந்த வருடம் ஓஹோன்னு இல்லாட்டியும் அய்யகோ ன்னு இல்லாமல் இருந்தாலே போதும்
ஆண்டவா ...!
ஓஹோன்னானாம்...!
என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .