Apr 27, 2014

விளம்பரம்



மாதவன் & இமான் அண்ணாச்சி இவர்களிருவரும்தான் இன்றைய தேதிக்கு தமிழர்களை பாடாய்ப்படுத்துபவர்களில் முக்கியமானவர்கள் . பேசாமல் மேற்படி இருவரையும் நாடு கடத்திவிடல் நலம் .

எழுபத்து ஐந்து லட்சத்தில் உங்க பட்ஜெட்டுக்குள்ள வீடுன்னு சொல்லும் மாதவன் விளம்பரத்தை பார்க்கும் போதெல்லாம் பத்திக்கிட்டு வருது . தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லோருமே ஆண்டிமுத்து ராசா என்ற நினைப்பில் மேற்படி விளம்பரத்தை எடுத்திருப்பார்கள் போல . யய்யா பில்டர்களே உங்க பில்டப்பு தாங்க முடியல . நாங்கல்லாம் ஆண்டிப்பட்டிக்கு கூட ராசா கூட இல்ல வெறும் ஆண்டி மட்டுந்தேன் .

மற்றொன்று டேபிள் மேட் விளம்பரம் . ஸ்கூல் மேட் , காலேஜ் மேட் , ரூம் மேட் ஏன் ஆஃபிஸ் மேட் கூட இல்லாமல் இருக்காலாம் , ஆனால் டேபிள் மேட் இல்லாமல் இருக்கலாமா..? என்ற ரேஞ்சிற்கு படுத்துகிறார் அண்ணாச்சி . உங்க வீட்டுல டேபிள் மேட் இருக்கான்னு வாய்க்குள்ளாற மைக்க  விட்டுடுவாரோன்னு பயத்துல  இப்பொழுதெல்லாம் சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியைக்கூடப் பார்ப்பதில்லை .


கப்பித்தனமான விளம்பரங்கள் ஒருபுறம் படுத்துனாலும் , மறுபுறம் ரசனையான விளம்பரங்களுக்கும் குறைவில்லை . ஹட்சன் நிறுவனத்தினரின் ஆரோக்கியா பால் மற்றும் ஹட்சன் தயிருக்கான விளம்பரங்கள் எனக்கு மிகப் பிடித்தவை. 

எந்த உணவுப்பொருட்களில் கலப்படம் இருந்தாலும் சகித்துக்கொள்ளும் நம்மால் பாலில் மட்டும் கலப்படம் இருப்பதை சகித்துக்கொள்ளவே முடியாது . இந்த கருத்தை மிகச்சரியாகப்புரிந்து கொண்டு வெகு யதார்த்தமான பின்னணியுடன் , மிக எளிமையாக , கொஞ்சமும் ஒப்பனையற்ற ஒரு விளம்பரம் . மிக முக்கியமாக தமிழர்கள் மறந்த சுய தொழிலை , குறிப்பாக பெண்களின் தொழில் வாய்ப்பையும் முன்னேற்றத்தையும் ஒருசேர கொடுத்திருப்பது விளம்பரத்தின் சிறப்பு .






அடுத்தது மேற்படி நிறுவனத்தாரின் தயிர் விளம்பரம்.  ஆங்கில விளம்பரம் என்ற பொழுதிலும் , அட்டகாசமான பின்னணி இசையும் , எழில் கொஞ்சும் பின்புலக் காட்சிகளும் கண்களைக் கவர்ந்திழுக்கின்றன . குறிப்பாக விளம்பரம் முடியும் தருவாயில் வாயில் தயிருடன் வரும் மங்கையை பார்க்கும் பொழுது எனக்கும் வாயிலிருந்து தயிரைப்போன்றதொரு திரவம் வருகின்றது .ரசனையற்ற மனைவி அதை ஜொள்ளு என்கின்றாள் – போகட்டும் J.








என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .





Apr 12, 2014

பேசாத வார்த்தைகள் : சூப்பர் சிங்கர் , ட்வீட் , ச.இ.க.இ ...!



ட்வீட் !

சிவகங்கை தொகுதியில் நானே போட்டியிடுவதாக நினைத்து ஓட்டுப்போடவும் –ப.சிதம்பரம் பேட்டி.

அய்யய்யோ...! கிடைக்கப்போற ஒன்னு ரெண்டு ஓட்டுக்கும் வேட்டு வச்சுட்டாரே அப்பச்சி – கார்த்தி சிதம்பரம் - மைண்ட் வாய்ஸ் .

               **************************************************************************************

ச.இ.க.இ...!

மண் வாசனையை நுகராத நாசியும்
இடிச்சத்தம் கேளாத செவியும்
மின்னற் கீற்றைப் பார்க்காத கண்ணும்
பிறவிப்பயனடைவதே இல்லை ...!

எமது நாசியும்
செவியும்
கண்ணும்
இன்று பிறவிப்பயனடைந்தன  ...!

              **************************************************************************************

சூப்பர் சிங்கர்.

ஆரம்பித்துவிட்டார்கள் அடுத்த ரவுண்டை . இன்றைய தேதிக்கு நீயா நானாவையும் , சூப்பர் சிங்கரையும் சிலாகிப்பது என்பது ஒரு Style Statement போல ஆகிவிட்டது . முன்பெல்லாம் நீயா நானா புகழ் கோபிநாத் என்று போடுவார்கள் , இப்பொழுது நீயா நானா புகழ் அராத்து என்று பிளக்ஸ் வைக்கிறார்கள் . அதாகப்பட்டது நிகழ்ச்சி அடுத்த கட்டத்திற்கு போய்விட்டதாம் .

சூப்பர் சிங்கர் இன்னும் கொஞ்ச நாளில் ஒரு பிராண்ட் ஆக உருவெடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை . Flat ல் நாங்கள் டிவி பார்க்கவில்லை எனிலும் முப்பத்தி சொச்ச வீட்டிலிருந்தும் கோரசாக வந்து விழுகின்றது சூப்பர் சிங்கர் ஒலி.

சொந்தமா சுச்ச்சூ போகத் தெரியாத குஞ்சு , குளுவானை எல்லாம் கூட்டி வந்து பாடு பாடுன்னு பாடுபடுத்துகின்றார்கள் நம் பாசத்திற்குரிய தமிழ் அம்மா , அப்பாக்கள் . ஒரு அம்மா வாய் நிறைய புன்னகையோடு சொல்லுது , காலை ஒன்பது மணி குரல் தேர்வுக்கு முதல் நாள் மாலையே வந்து இடம் பிடித்தோமென்று . இரண்டு வருடங்கள் வீட்டிற்கே தனி பயிற்சியாளர் வரவழைத்து பயிற்சி மேற்கொண்டோம் , இன்னொரு வாய்ப்பு கண்டிப்பாக தரவேண்டுமென்று மற்றுமொரு நிராகரிக்கப்பட குழந்தையின் அம்மா – சண்டை போடுகிறார் . டாக்டராக்க வேண்டும் , இஞ்சினியர் ஆக்கவேண்டும் என்ற தமிழ் பெற்றோர்களின் ஆசையில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பது சூப்பர் சிங்கராக்க வேண்டும் , சூப்பர் டான்சர் ஆகவேண்டும் என்ற ஆசையும் . போகிற போக்கை பார்த்தால் வீதிக்கு நாலு ரியாலிட்டி ஷோ பயிற்சி மையங்கள் வந்துவிடும்போல .


போட்டியில் அடுத்த ரவுண்டிற்கு போகவேண்டுமென்ற ஆதீதமான அழுத்தத்தை குழந்தைகளின் மேலே திணிக்கின்றார்கள் . திணிக்கும் திணிப்பில் எல்லாமே வாந்தியாகத்தான் வெளிவருகின்றது. ஓவியம் , பாட்டு , நடனம் போன்ற கலைகளெல்லாம் இயல்பாய் வெளிவந்தால் தான் சிறப்பே . நம்மாட்களுக்கு இது தெரிவதே இல்லை .


இது எங்கே போய் முடியுமென்று தெரியவில்லை . ரியாலிட்டி ஷோ தோல்வியின் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் பத்து வயது குழந்தை தற்கொலைன்னு செய்தி வரும் வரை  நாமளும் சரி , சேனல்சும் சரி திருந்தமாட்டோமென்றே நினைக்கின்றேன் .


என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .



Apr 1, 2014

நிமிர்ந்து நில் ...!






கார்கள் , மரங்கள் எல்லாம் தன்னால தீப்பிடித்துக்கொண்டது ன்னு பேப்பர்ல செய்தி வர்ற மாதிரி , ரோட்டில் நடந்து கொண்டிருந்தவர் திடீரென்று தீப்பிடித்துக்கொண்டு எரிந்தார்னு இனிவரும் காலங்களில் செய்தி வந்தாலும் வரும் . ஆச்சர்யப்பட அவசியமே இல்ல, அடிக்குற வெயிலு அப்படி. அம்மண உடம்புல ஆயில ஊத்தி எரிக்குற மாதிரி இருக்கு  .

போன ஞாயிற்றுகிழமை, ஒரு நொந்த வேலை காரணமாக டவுனுக்கு போயிருந்தேன் . எங்க , அடிக்குற வெயில்ல பாடமாகி ,  மாலைமலர்ல படமாகிடுவோமொன்னு பயத்துல செந்தில் குமரனில் ஒதுங்கினேன் . ரெண்டு ஆப்சன் ஒன்னு குக்கூ , மற்றொன்று பதிவின் தலைப்பு . மண்டையில எதுவுமே இல்லைன்னாலும், பொதுவா மதியக் காட்சி படம் பார்த்தாலே மண்டை பாரமாகிடும் . பட், ஒதுங்க வேற வழியே இல்ல , சரி குக்கூ போலாம்னு பார்த்தா , ஏற்கனவே  ராமு , வமு வில் ஏற்றி வைத்த பாரம் பயமுறுத்த நிமிர்ந்து நிற்பதென முடிவாயிற்று .


செரி , வாங்கோ நிமிர்ந்து நிற்போம் ,

ஆல்ரெடி, நம்ம பதிவ ஜட்ஜுங்க கழுவி ஊத்துன மாதிரியே முதல் பாதி ஜிவ்வு , ரெண்டாவது பாதி ஜவ்வு ...! அதிகாரிகளாலும் , அரசியல்வியாதிகளாலும் பழிவாங்கப்படும் ஒரு சாமான்யன் , எப்படி பொங்கி எழுந்து பொங்கல் வைக்கிறான்ற “CK நாயுடு காலத்து கதைதான்”. (“ Sentence Inspired by Mr.ஆவி”). .

மலர்ச்சியும் , நெகிழ்ச்சியுமான அமலா பாலைதான்  மைனாவிற்கு பிறகு எங்கேயும் பார்க்க  முடியவே இல்லை . மைனாவிற்கு பிறகான அனைத்து படங்களிலும் ,  அம்மணி மூஞ்சி ஆல்வேஸ் Sepia டோனில் தான் இருக்கிறது . மேற்படி படத்திலும் அஃதே . தமிழ் நடிகர்களிலேயே , ரெம்ப மட்டமான DRESSING சென்ஸ் உள்ளா ஆளு நம்ம ரவிதான் . அகா துகா வெல்லாம் அசத்தலா ட்ரெஸ் பண்ணிட்டு இருக்கும்போது , நம்மாளு ஏன் இப்பூடி படுத்துறாருன்னு நிறைய முறை நினைச்சுருக்கேன் . இதே மாதிரி நிறைய பேரு நினச்சுருப்பாங்கோ போல , அதான், ஏன் அங்கிள்ஸ் போடுற சட்டையா போடுறன்னு சந்தோஷ் சுப்பிரமணியத்தில் ஜெனிலியாவை விட்டு கிண்டலடித்திருப்பார்கள் . இந்த படத்தில பரவா இல்ல . 

இரண்டாம் பாதியில் வரும் ஜெயம் கதாபாத்திர சித்தரிப்பு ரெம்ப சுமார் . பொண்ணுங்க ஷாலை உருவி கழுத்துல போட்டுக்குறதும் , கட்டிப்புடிச்சு ஆறுதல் சொல்லுறதும் முற்போக்குத்தனம் போல . நமக்குத்தான் மோசமா தெரியுது .

போலி பத்திரம் தயாரிக்கும் ஒரு பெண் கதாபாத்திரம் படத்தில வருது , அந்த அம்மணியோட உடல் மொழியும் சரி , உடைகளும் சரி , வசன உச்சரிப்பும் சர் class class class ...! ஆரம்பத்துல சூரி டாவடிக்குற மாதிரி கட்டுனாங்க . எங்க , கிளைமாக்ஸ்ல ரெண்டு பேரு கண்ணும் சந்திக்குற மாதிரி எதுனா சீன் வச்சுடுவாங்களோன்னு பதறிப்போயிருந்தேன் . நல்ல வேளை அப்டி எந்த அசம்பாவித சீனும் இல்ல . சூரி முதல் பாதி காமெடியில் கலகலக்க வைக்கிறார் , பின் பாதி குணச்சித்திரத்தில் கண்ணை மட்டும் கலங்கலாக வைத்திருக்கிறார் .

பொறி பறக்கும் வசனங்கள் புல்லரிக்க வைக்குது . படத்தில self corruption அப்டிங்க்குற ஒரு சொல்லாடல் கையாளப்பட்டிருக்கு . அந்த ஒரு சொல்லும் அதைதொடர்ந்து வரும் வசனமுமே போதும் நான் குடுத்த அம்பது ரூவாய்க்கு . மற்றபடி ,படத்தில கனி சார் பண்ணுன ஒரே மிஸ்டேக்கு , அதுவும் கிரிமினல் மிஸ்டேக்கு – பாடல்கள்.

என்னதான் ஆயிரம் நொட்டை சொன்னாலும் , என்னளவில இந்த மாதிரி படங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தமிழில் வந்துட்டு இருக்கனும்னுதான் எதிர்பார்க்கிறேன் . இல்லன்னா ,ஆஸ்பத்திரியின் பிரசவ அறையில் குழந்தையை பார்ப்பதற்கு கொடுக்கும் அம்பதும் , பிணவறையில் சடலத்தை பார்ப்பதற்கு கொடுக்கும் நூறும் லஞ்சமென்றே தெரியாமல் போய்விடும் அடுத்த தலைமுறைக்கு.



என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .