Nov 28, 2013

நிலாச்சோறு – பதிவர் சந்திப்பு , நான் ஈ , பண்ணையார் & பத்மினி - இசை , டிக்கெட் & ட்வீட் .





பதிவர் சந்திப்பு :

INDIBLOGGERS அமைப்பின் மூலம் கோவையில், கோவை வாழ் பதிவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். நிகழ் தேதி – 15.12.2013 . நிகழ்விடம் – கோவை – ஆர்.எஸ்.புரம். மேலதிக தகவல்களுக்கு .. http://www.indiblogger.in/bloggermeet.php?id=237.

மேற்படி நிகழ்ச்சிக்கு கட்டணம் எதுவுமில்லை . ஆனால், முன் கூட்டியே இருக்கையை உறுதி செய்யவேண்டும் . நானும் ஒரு துண்டு போட்டிருக்கிறேன்  J .

சினிமா

திரைப்படங்களில், சாகடிக்கப்பதற்காகவே சில கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கும் . முறையே நம்மையும் , சமயங்களில் அந்த கதாபாத்திரத்தையும்.  முதல் வகையை தவிர்த்து இரண்டாம் வகையில் சாகடிக்கப்படும் (கதையின் திருப்பத்திற்காக) கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நம்மை சலனப்படுத்துவதில்லை . ஆனால் , ஒரு சில படங்களின் ஒரு சில சாகடிப்புகள் மட்டும் என்னவோ செய்துவிடும் , எவ்வளவு நாட்களாயினும்  ....! சமீப காலங்களில் அப்படி சலனப்படுத்திய  இரண்டு கதாபத்திரங்கள்  ...

“கோ” படத்தில் பியாவின் சாகடிப்பு – அழுகாச்சியே வந்துடுச்சு ... பாதிலேயே எழுந்து வந்துடலாமான்னுகூட யோசிச்சேன் ....!

மற்றொன்று,

“நான் ஈ” படத்தில் “நானி”யின் சாகடிப்பு – “நான் ஈ” படக் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கும்போதெல்லாம் ஒரே ஒரு எண்ணம் தான் தோன்றும் ....

“நானி”யை சாகடிக்காம அப்படியே ஒரு அழகான காதல் கதையாவே சொல்லியிருக்கலாமே......?


இசை  :

பண்ணையாரும் பத்மினியும் – இரண்டு நாட்களாக கணினியில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது . ஜி.வி.பி , அனிருத் வரிசையில் அடுத்த இசைப்பாலகன் – ஜஸ்டின் பிரபாகரன் . படத்தின் தளத்திற்கும் , படம் நடக்கும் காலத்திற்கும் JUSTICE பண்ணியிருக்கிறார் என்றே தோன்றுகின்றது . பாடல்கள் எல்லாம் அருமை . VINTAGE FEEL SONGS ...!

பிரபாகரனின் குரல், யுவனை நினைவுபடுத்துவதாக பேச்சு – அப்படித்தான் படுத்துகிறது நேக்கும்   . “எங்க ஊரு வண்டியை” SUPER SINGER JUNIORS ஓட்டியிருக்கிறார்கள் – அருமையான பயணம்  . மற்ற அனைத்துப் பாடல்களுக்கும் பெண் பாடகர்களின் குரல் தேர்வு வெகு பொருத்தம் . பாடல் வரிகள் வாலிபக் கவிஞர் .

என் விருப்பப் பாடல் – ஒனக்காக பொறந்தேனே ...!

விமர்சகர் ஆவியின் பார்வையில் பண்ணையாரும் பத்மினியும் - இங்கே

டிக்கெட் டிக்கெட் ...!

தொடர்வண்டியில் இதுநாள் வரை முன்பதிவு செய்து, “படுத்து”க்கொண்டு பயணித்ததே இல்லை . ALWAYS UNRESERVED தான் .வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்ற போனவாரம் ஒரு வாய்ப்பு . வெகு சிரமப்பட்டு irctc யில் கணக்கு துவங்கி , முன்பதிவும் செய்தேன் . பெருமை பீற்றிக்கொண்டிருக்கும்பொழுது நண்பர் போட்டார் தண்டவாளத்தில் குண்டை . நான் பதிவு செய்திருப்பது RLWL லாம். அதாகப்பட்டது , REMOTE LOCATION WAITING LIST . ரயில்வே பட்ஜெட்டுல நாற்பது ரயில் தமிழ்நாட்டிற்கு விட்டிருக்கிறார்கள் என்றால் கூட நம்பலாம் ஆனால் RLWL சீட்டு உறுதியாகும் என்று நம்பிடாதப்பா ... சாமி சத்தியமா உனக்கு உறுதியாகாது இருக்கை ன்னு சொல்லிட்டு போயிட்டார் . வேறென்ன நண்பர் சொன்னதே நடந்தது . ரத்து செய்த மூன்று நாட்களில் பணம் திருப்பி தரப்பட்டது, ரூபாய் நூறு பிடித்தத்தோடு  .  PRACTICE MAKES A MAN PERFECT...! வேற எப்பூடி சப்பகட்டுறது ...!


பிளாக்குல ட்வீட்டு

ஆயிரத்தெட்டு வசதிகள் இருந்தாலும் APARTMENT ல் குடியிருப்பது LODGE ல் குடியிருப்பதுபோலவே இருக்கிறது   // வாழ்வைத் தொலைத்து பிழைப்பைத் தேடுபவன் L //


என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .




9 comments:

  1. Visit : http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_28.html

    ReplyDelete
  2. வணக்கம்

    அருமையான ஒழுங்கமைப்பு... தொடருங்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அருமை.... ட்வீட்.... உண்மை!

    இரயில் பயணச் சீட்டு அனுபவம் - :)))

    த.ம. 2

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. பதிவர் சந்திப்பு ,சிறக்க வாழ்த்து !

    ReplyDelete
  6. நிஜம் தான் .கோ படத்தில் பியா வின் மரணம் சட்டென நம் உற்சாகத்தை வடிப்பதாக (முடிப்பதாக)அமைந்திருந்தது இல்லையா ?!!!!!!!!!!!!!

    ReplyDelete
  7. நல்ல இருக்கு பதிவு ...
    ரிமொட் லோ. டிக்கட் இப்போதான் தெரியும் நன்றி.

    ReplyDelete

Related Posts with Thumbnails