பேசாத வார்த்தைகள் அழகானவை ...! எம் உலகம் பேசாத வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது ..! எழுதாத வார்த்தைகள் அழகானவை ...! எம் உலகம் எழுதாத வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது ..!
Sep 27, 2013
Sep 24, 2013
ராஜா ராணி ...!
ரெம்ப FRESH ஆன ஒரு FEEL GOOD ALBUM ஜீ.வி.பி. யிடமிருந்து ...!
ஆல்பத்தோட ஆரம்பம் “A LOVE FOR LIFE” மியூசிக் கேக்கும்போதேல்லாம் “செல்வராகவன்”
படம் பாக்குற ஒரு FEEL . VERY SOOTHING COMPOSITION . அனேகமா டைட்டில் SONG ஆக இருக்கலாம் .
அடுத்து, ஆல்பத்தோட ராணி ...! “அஞ்ஞ்சாடே(?)
, அஞ்ஞ்சாடே” . பாடலின் சிறப்பு சக்திஸ்ரீயின் கிறக்கமும் , குழைவும்
கலந்த குரல் & பா.விஜயின் வரிகள் .
பொதுவா ஆணின் பார்வையில் சொல்லப்படும் காதலின் தாக்கத்தை பெண்ணின் பார்வையில் சொல்லியிருக்கின்றார்கள்
. தங்கள் உள்ளம் கொள்ளை கொண்ட கள்வர்களின்
அழைப்புக்கு காதலிகள் காலர் ட்யூனாய் வைக்க ஏற்ற பாடல் .
“மிளகாப் பூப்போல என்னுள்ளே அழகாப் பூக்க விட்டானே .
வெக்கத்துல விக்க வச்சானே , வெப்பத்துல சிக்க வச்சானே “. வரிகள் செம்ம ....!
ஹெட் போன்ல கேக்கும்போது மட்டுமே பாடல் வரிகளை தெளிவாக கேட்கமுடியும் .
அடுத்து , “ஜில்லென ஒரு மழைத்துளி “
கடற்கரை சாலையில் காதலியைக் கட்டிக்கொண்டு காற்றோடு பைக்கில் பறப்பது போல ஆரம்பிக்கும்
பாடல் , போகப்போக ட்ராபிக் கான்ஸ்டபிளை பார்த்த லைசென்ஸ் இல்லாதவன் போல திணறி மீண்டும்
பறக்கின்றது . கிளிண்டன் , V.T.V அல்போன்ஸ் , சூப்பர் சிங்கர் அல்கா பாடியிருக்கின்றார்கள்
.
NEXT , “ஹே பேபி” ஆரம்பத்துல வர்ற மியூசிக் ( சாக்ஸாபோன்..?) அட்டகாசம் . ஜி.வி.யோட
ஜில்- குரல்ல தொடங்குவது கானா பாலாவோட கர கர CONTRAST குரல்ல முடியுது .
அடுத்து , “இமையே , இமையே” , “ஒரு பாதி கதவு” போல் இல்லாவிட்டாலும் அருமையான மென்
மெலோடி . ஜி.வி . யும் சக்திஸ்ரீ யும் பாடியிருக்கின்றார்கள் . வழக்கமாக பாடும் பார்ட்னருக்கு
ரெஸ்ட் போல ....!
NEXT , ஓ(டு)டே ஓ(டு)டே ...! அதிர அதிர இசைத்தாலும் , திமிர திமிர வெளிப்படும்
குரலுக்கு சொந்தக்காரரான நாம “விஜெய் பிரகாஷ்” & இன்னும் இருவர் பாடியிருக்கின்றார்கள்
. “உன்னிமேனனுக்கும்” அப்புறம் ரெம்ப ஸ்பஷ்டமா வார்த்தைகளை பாடுவது அனேகமா நம்ம வி.பி
யாத்தானிருக்கும் .
அடுத்து , குட்டியா , க்யூட்டா வந்தனா ஸ்ரீனிவாசின் குரலில் “உன்னாலே”.
டிஸ்கி : டீசர் & டிரைலர பார்க்கும்போது
, காட்சிகளும் , COSTUMES ம் கண்ல ஒத்திக்குற மாதிரி கலக்கலா இருக்கு. படம் எப்டி இருக்கப்போகுதோ
தெரியல . ஆனா, கண்ணுக்கும், காதுக்கும் குளிர்ச்சியா , VISUAL & MUSICAL TREAT
இருக்கும்னு நம்பலாம் ...!
என்றென்றும் புன்னகையுடன் :)
ஜீவன்சுப்பு .
Sep 17, 2013
பிளாக்குல ட்வீட்டு ...!
மாதச் சம்பளம் வாங்குபவனுக்கு மல்லிகைப்பூகூட
ஆடம்பரப் பொருள்தான்...! ஒரு முழம்
அறுபது ரூவாயாம் ...! // மல்லி இப்போ வில்லி... //
**********************************************************************************************************************************************************
பெண்கள் பூ வைப்பது OUT OF FASHION என்றும் , தலையில் பூ வைத்தால் பேணும் ஈரும் பெருகும்
என்று சொன்னவன் நிச்சயம் ஒரு திருமணம் ஆன ஆடவனாகத்தான் இருக்கக்கூடும் ...! அந்த ஜீவன்
எங்கிருந்தாலும் வாழ்க ....! // பாம்பின் கால் பாம்பறியும் //
**********************************************************************************************************************************************************
அதென்னமோ தெரியல சேச்சிகள பிடிக்கும் அளவுக்கு சேட்டன்களை பிடிப்பதே இல்லை ....!
// திரு(மதி)வோணம் வாழ்த்துக்கள் by ரெம்ப ரெம்ப நல்லவன் //
**********************************************************************************************************************************************************
மியூசிக் கேக்குறது பிடிக்குதோ இல்லையோ , மியூசிக் கேக்குறது பிடிக்கும்னு சொல்லிட்டு
திரியுறது ரெம்பப் புடிச்சுருக்கு - // ஒரு வெளம்பரம் //
**********************************************************************************************************************************************************
காசு கொடுத்து வாங்குற ஜவுளி ரெம்ப நாள் தாங்காட்டியும் பரவா இல்ல , ஓசில வாங்குற
கட்டப்பையி ரெம்ப நாள் தங்கணும் ...! // தமிழனின் பர்ச்சேஸ் உத்தி – நான் தமிழன் //
**********************************************************************************************************************************************************
சமீப காலங்களில், தமிழக மக்கள் பேசிப் பேசி சலித்துப்போன
இரு ஆங்கில வார்த்தைகள்
B.E & SOFTWARE .
**********************************************************************************************************************************************************
என்றென்றும் புன்னகையுடன் .
ஜீவன்சுப்பு .
Sep 6, 2013
வணக்கம் சென்னை – AWESOME MUSIC BY ANIRUDH…!
முதல் முறை கேட்டு அவ்வளவாக
பிடிக்கவில்லை . பதிவர் கே.கே ( கானல்நீர் கருப்பையா ) வோட பதிவை படித்த பின் மறுபடியும்
இரவில் கேட்கும் பொழுது ரெம்பப்பிரமாதமா இருந்தது . ராப் , folk , மெலடி ன்னு கலந்து
கட்டி அட்ச்சுருக்காப்புல அனிருத் . பாடகராகவும் அசத்தியிருக்கின்றார் . மொத்தம் ஆறில்
ஐந்தில் அனிருத் பாடியிருக்கிறார் .
“ஒசக்கா” & “ஐலசா”
பாடல கேக்கும் போது, ரஹமான் கடல்ல இன்னொரு பாட்டு போட்ருந்தா இப்டிதான் வந்துருக்குமோங்குற
அளவு பிரமாதம் . “ஒசக்கா” வோட ஸ்லோ வெர்சன்
“ஐலசா” அதவிட சூப்பர் . ஹீரோ சிவா வ நெனச்சாதான் கொஞ்சம் கலவரமா இருக்கு , மனுஷன் என்ன
பண்ண போறாரோ .
“எங்கடி பொறந்த பாடல்”
ஆரம்பத்துல சோக பாட்டு தொனில இருந்தாலும் போகப்போக சூப்பர் . குறிப்பா பாடல் வரிகள்
. சச்சின் நீ , அக்தர் நான் ; ஒசாமா நீ , ஒபாமா நான் ; ஆண்டனி நீ , பாட்சா நான் .... பாட்சா நான்... செம ரகள ...!
“ஹே” , மற்றும் “ஓ பெண்ணே”
அப்புறம் “சென்னை ராப்” எல்லாமே எக்சலன்ட்
....! . வணக்கம் சென்னை பாடல்கள் கேட்டா பிடிக்காது கேக்க கேக்க தான் பிடிக்கும் .
ஷ்யூர் ஹிட் : ஒசக்கா
& ஐலசா . “ஓ பெண்ணே”.
என்றென்றும்
புன்னகையுடன் ...
ஜீவன்சுப்பு .
Subscribe to:
Posts (Atom)