தொடர்பதிவில்
எம்மைக் கோர்த்துவிட்ட “ஸ்பை” க்கு ஒரு கொட்டு
....!
முட்டையப்
பார்க்கும்போது உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வரும் ...? எனக்கு C ++ பாடம் தான் ஞாபகத்துக்கு வரும் ...! ( ஏன்னு ல்லாம்
விலாவாரியா சொன்னா , எம்மேல் நீங்க வச்சுருக்க கொஞ்சநஞ்ச மரியாதையும்(?) மானாவாரியா மண்னைக்கவ்விரும்...!
ஸோ... நீங்களே யூகிச்சுக்குங்க).
இரண்டாயிரத்தின்
ஆரம்பத்தில், அறந்தாங்கி பாலிடெக்னிக்- கணினி செய்முறைக்கூடத்தில் தான் கூட்டத்தோடு கூட்டமா , எதுவுமே செய்யாம எட்டி
நின்னு எக்கிப் பார்த்தேன் . அதுதான் கன்னி
கணினி தரிசனம் . கணினியே தொடாம C,C++ லாம் படிச்ச(?) பாக்கியவான் அடியேன்.
கல்லூரியில் பசையுள்ள பசங்கல்லாம் தனியா கணினி வகுப்புக்கு போயி , பேருக்கு
பின்னாடி என்னென்னமோ எழுதிக்குவாங்க ...! மெயில் ஐடி வச்சுருக்கவனை எல்லாம் ,
மெர்சிடிஸ் கார் வச்சுருக்கவன பாக்குற மாதிரி “ஆ” ன்னு பார்த்த நாட்கள் அவை .
அப்புறம் படிச்சு
முடிச்சு பெங்களூரு , சென்னை , கோவை , திருச்சி , திருப்பூருன்னு நாலு வருசத்துல
அஞ்சு ஊருல வேல பாத்து, மறுபடி கோவை
யிலேயே செட்டிலானவரைக்கும் கம்ப்யூட்டருக்கும் நமக்கும் காத தூரம் . சொந்த
பந்தமெல்லாம் கம்ப்யூட்டர் படிக்கலையா , கம்ப்யூட்டர் படிக்கலையான்னு கெடக்கிற
கேப்புல எல்லாம் கிடா வெட்டி, கம்ப்யூட்டர ஒரு விரோதியாகவே ஆக்கிப்புட்டாங்க .
இரண்டாயிரத்து ஆறு
வரைக்கும் கம்ப்யூட்டர் ல , “கண்ட்ரோல் ஆல்ட் டெலிட்” கூட தெரியாது . வேற வழியே
இல்லாம கடசில கம்ப்யூட்டர் தெரிஞ்சுக்கவேண்டிய நிர்பந்தம், இல்லாங்காட்டி வேல
பணால். அப்றமென்ன இப்ப வரைக்கும் கம்ப்யூட்டர் கத்துக்கிறேன்னு ஒரே
அட்ராசிட்டிதான்....!
சீனியர் இல்லாத ஒரு
நாள்ல , ஜி.எம் ஒரு புரெடக்சன் ரிப்போர்ட் கேக்க , நான் word னே தெரியாம அத ஒப்பன்
பண்ணி கால்குட்டேர் லையே கணக்குபோட்டு எடுத்துட்டு போனேன் . பாத்தோன்ன
பாரட்டுவாருன்னு பாத்தா பிராண்டிட்டாரு ....!
என்னய்யா
ரிப்போர்ட்டு இது ...? தப்பு தப்பா இருக்கு ...! போ... போயி எக்சல் ல போட்டு
எடுத்துட்டு வா ன்னு தொரத்திவிட்டுட்டாறு ...! என்னடா இது லூசுத்தனமா இருக்கு ,
எக்சல்ல்ல லக்கேஜ் வேணா போடலாம் .... எப்டி ரிப்போர்ட் போடமுடியும் ...? நமக்கு
எக்சல்லும் ஓட்டத்தெரியாதேன்னு சொல்லமா கொள்ளமா ரூமுக்கு ஓடியாந்துட்டேன் .
மறுநாள் சீனியர் சொல்லி தான் எக்சல் ண்ணா என்னன்னே தெரிஞ்சுது ...!
மொத மொதல்ல
பிரின்ட் அவுட் எடுத்தது அத விட பெரிய காமெடி . வேறோருமொர, அதே ஜி.எம்
மீட்டிங்க்ல இருக்கும்போது ஒரு WORD FILE
ல ஒரு பார்ட்டியோட பேர சொல்லி , அந்த டீடெயில பிரிண்ட் எடுத்துட்டு வான்னும்
,அர்ஜன்ட் ன்னும் சொல்லிட்டு போன
வச்சுட்டாரு. சரி பிரின்ட் அவுட் தானேன்னு நானும் பிரின்ட் கொடுத்து
எடுத்துக்கிட்டு இருந்தேன் . ஒரு பத்து நிமிஷம் இருக்கும் பாதி மீட்டிங்க்லேயே
பாஞ்சு வந்தாரு நம்ம ஜி.எம்மு ...
“என்னய்யா பண்ணுற
...?”
“பிரின்ட்
எடுத்துட்டு இருக்கேன் சார் ... “
நாப்பது பக்கம்
வந்துருச்சு , இன்னும் பத்து பக்கம் வந்தா நீங்க கேட்ட பார்ட்டி டீடேயிலு
வந்துரும் சார்ன்னு சொல்லி முடிக்கவும் , அவர் தலயில அடிச்சுக்கவும் சரியா
இருந்துச்சு ...!
கம்ப்யூட்டர்ல ,
ஒவ்வொரு எழுத்தா டைப்பண்ணிட்டு இருக்கும்போதே சட்டுன்னு , அய்யய்யோ U வக்காணூம் ,
E காணும்னும் , கேணியக்கானும்ங்குற மாதிரி நா போட்டு வச்சுருந்த ரிப்போர்ட்ட
காணும்ன்னு அப்பப்போ EDP STAFFS ச கலவரப்”படுத்துன”
நாட்கள் லாம் மறக்கவே முடியாது .
ஒரு முறை ஊருக்கு
போயிருந்த போது, சொந்தக்காரர் ஒருத்தர் என்னோட வேல , சம்பளம் , படிப்பெல்லாம்
பத்தி விசாரிச்சுட்டு இருந்தாரு . நானும் சொல்லிட்டு இருந்தேன் .
“இந்த சம்பளத்த
வச்சு என்ன பண்றது” ...? “ஆமா ஒனக்கு கம்ப்யூட்டர் தெரியுமா ...?”
“கொஞ்சம் , கொஞ்சம்
தெரியும் மாமா ...?
“ம்ம்ம் ..! M.S.
OFFICE தெரியுமா ...?”
“தெரியாது மாமா
...”
இதோட
நிறுத்திருந்தா அநியாயமா அவர் என்னோட பேசுறதையே நிறுத்திருக்க மாட்டாரு ...!
அடுத்து நாங் கேட்ட
கேள்வி இதுதாங்க ...!
“மாமா ! M.S.
OFFICE கோயமுத்தூர்ல எந்த ஏரியாவுல இருக்கு .....?”
“...........”
ஒன்னு முறையா
படிச்சுருக்கோணும் , இல்லாங்காட்டி சின்னவயசுலே இருந்து கம்ப்யூட்டர்
அறிமுகமாயிருக்கோனும் ரெண்டுங்கெட்டான இருந்தா பெரும் பாடுதான் ....!
தத்தி, தத்தி இதோ
இப்போ வலைப்பதிவு வரையிலும் வந்துருக்கேன் ... அதுக்கு முக்கியமான காரணம் நா வேல
பாக்குற நிறுவனம் , என்னோட சீனியர்ஸ் , சக நண்பர்கள் , பத்திரிகைகள் . இதோ இத வாசிச்சுட்டு
இருக்க நீங்க .... எல்லாருக்கும் ரெம்ப நன்றிங்கோ ......!
ஏதோ, அஞ்சு பெற கோர்த்துவிடனுமாமே
....! இன்னும் எழுதாமா யாருனாச்சும் இருக்கீங்களா ...? நல்லாருப்பீங்க நீங்களா வந்து
மாட்டிக்குங்க மக்களே....!
என்றென்றும்
புன்னகையுடன் ...
ஜீவன்சுப்பு .