Showing posts with label டீவி. Show all posts
Showing posts with label டீவி. Show all posts

Dec 16, 2013

சேனல்ஸ் பக்கம் : விஜய் & புதுயுகம்



புதுயுகம் : கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு  

தலைப்பை மிகச்சரியாக , மிகச்சிறப்பாக நியாயப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி . தலைப்பிசை , தலைப்பின் வடிவமைப்பு , தொகுத்து வழங்குபவரின் குரல் , விசயங்களை சேகரித்து சுவையாக வழங்குவது என எல்லாமே ரெம்பப் பிரமாதம் . உணவோடு சேர்த்து வரலாற்றையும் ஊட்டுகிறார்கள் . Worth to Watch .


புதுயுகம் : ரிஷி மூலம்

நீயா நானாவின் மற்றுமொரு வடிவம் . என்ன , நீ.நா. வில் எதிரெதிர் வரிசையில் அமர்ந்து ARGUMENT பண்ணுபவர்கள் இங்கே அரைவட்ட வடிவில் உட்கார்ந்து ARGUMENT பண்ணுகிறார்கள் . COAT டையும் , கோபிநாத்தையும் பார்த்துச் சலித்தவர்களுக்கு , பாவாடை சட்டையில் அபிராமி தொகுத்து வழங்குவது ஆறுதல் . J ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகளில் விஜய்க்கு நல்ல போட்டி புதுயுகம் .


விஜய் : நீயா நானா

இரண்டு வாரங்களுக்கு முன்பான நீயா நானாவில் அறுபதும், இருபதும் இசைக்காக மோதிக்கொண்டார்கள்  . நீயா நானாவில் இதுபோன்ற அமைவது அரிது . அறுபதினர் அசத்திவிட்டனர் . எவ்வளவு திறமையாக பாடுகிறார்கள் . நம் வீட்டில இருக்கும் பெரியவர்களுக்குள்ளும் இதைப்போல  ஏதேனும் ஒரு திறமை இருக்கலாம் , நமக்குத்தான் நேரமே இல்லையே கேட்பதற்கு . சூப்பர் சிங்கர் சூப்பர் சீனியர் விரைவில் எதிர்பார்க்கலாம் .



மூன்றாவது நிமிடத்திலிருந்து ஒன்பதாவது நிமிடம் வரை அட்டகாசம்  .

மேற்படி நிகழ்ச்சியை பார்த்த வகையில் ரெண்டு வருத்தம் ...

முதலில் – பெரியவர்கள் அணியில் ஒரு பெண் கூட கலந்துகொள்ளாதது .

இரண்டாவது – இப்பொழுதெல்லாம் முப்பதிலேயே முன் நெற்றி PLOT ஆகிவிடுகின்றது. ஆனால் , நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சில பெரியவர்களுக்கு முன் நெற்றி வரை முடி புரளுகின்றது. இளைய சமுதாயம் இழந்தது இசையை மட்டுமல்ல ....



சேனல் ட்வீட் :

காம்பியரிங் TO ஸ்டார் – விஜய் டீவி ; ஸ்டார் டூ காம்பியரிங் – புதுயுகம் . J



என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .



Nov 13, 2013

நிலாச்சோறு - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்...! , ஹை(ய்யோ)க்கூ..! , பிளாக்குல ட்வீட்டு ...!





இந்தவருட தீபாவளிக்கு வெடிவாங்காத குறையை  விஜய் டீவி பார்த்து நிவர்த்தி செய்தோம் . காலை பத்துமணிக்கு மிஷ்கின் சுட ஆரம்பித்தார் , அடுத்து விஜய் , நிறைவாக கமல் ......! டப் , டுமீல், டமால் ....!

எட்டெட்டில் இருக்கும்  அம்மாவுடனும் , மூவெட்டை தொட்டிருக்கும் மனைவியுடனும் சேர்ந்து இலவசத்தொலைக்காட்சிப்பெட்டியில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்த்தோம். படம் பார்க்க ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் அம்மா கேட்டார் , தம்பி என்னடா இன்னும் ஆட்டுக்குட்டியையும் காணோம் ,ஓநாயையும் காணோம் ....? தலைப்பை பார்த்து இராம நாராயணன் படமென்று நினைத்துவிட்டார் போல . அப்புறம் ஒருவ(லி)ழியாக புரியவைத்தேன் .

மற்றவர்களுக்கு ஒரு விஷயத்தை புரியவப்பதைப்போல எரிச்சல் வரக்கூடிய ஒரு செயல் வேறதுவும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை . நாற்பதில் தான் நாய் குணம் என்பார்கள் , பாஸ்ட் புட் உலகத்தில் இப்பொழுது முப்பதிலேயே நாய்குணம் போல  . உடனடியாக யோகா வகுப்பு  போகவேண்டும். J

படம் பார்த்து முடித்து அம்மா சொன்னது ...!

இந்த கனமான ஆளு இருக்காப்புளைல, அதேன் ஓநாயி அந்தா ஆளு நல்லா சுமந்துருக்கன்யா ...!

அப்புறம் இந்த ஆட்டுக்குட்டி ரெம்பப் புதுசா , இளசா இருக்குடா தம்பி ... படம் பூரா நல்ல ஓடுறான்யா...!

என்னடா படம் இது ... ஒரு  பாட்டு இல்ல , சிரிப்பு இல்ல , ராத்திரிலேயே எடுத்துருக்காய்ங்க ....?

ஆமா கடசில ஓநாயி செத்துப்போச்சி , அப்ப ஆட்டுக்குட்டி ஓநாயா மாறிடுச்சா ன்னு கேட்டார் ....? நான் பதிலே சொல்லல....! தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா ....!


ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ...!




ஷாஜி யோட நடிப்பு . வழக்கமான தமிழ் சினிமா  போலீஸ் இரண்டு வகை . ஒன்று -துணியோட சேர்த்து உடம்புக்கும் கஞ்சி போட்ட மாதிரி விறைப்பாவும்  , பேண்டு ஷிப்பே பெயர்ந்து வந்துர்ற மாதிரி  சல்யூட் அடிச்சுகிட்டும் , நார் உரிச்ச தேங்கா மாதிரி தலைமுடியை வெட்டிக்கிட்டும் திரியும் வகை , மற்றொன்று அதற்கு நேரெதிரா தொடையே தெரியாத மாதிரி தொப்பையோட ஒரு சித்திரம். இப்டிப்பார்த்து பார்த்து சடஞ்சுபோனவனுக்கு ஷாஜி கதாபாத்திரம் அட்டகாசமான ரிலீப் . அவரோட பாடி லாங்க்வேஜ் & பேச்சு எல்லாமே ரெம்பப் பிடிச்சுருந்துச்சு .

மிஸ்கின் – குறிப்பா கல்லறை தோட்டத்தில் இரண்டு மெழுகுவர்த்திகளுடன் சேர்ந்து அவரும் உருகி நம்மையும் உருக்கும் காட்சி . உடல்மொழியை விட குரல் மொழி அபாரம் .

ஸ்ரீ - படம் நெடுக ஓடிக்கொண்டே இருக்கிறார் . சிறப்பான நடிப்பு . குறிப்பா மிஷ்கினை சுமந்து செல்லும் காட்சிகள் – தத்ரூபம் .

ஐயா வென்று சல்யூட் அடித்துக்கொண்டே சாகும் கான்ஸ்டபிள் . மனிதம் நிரம்பிய  பைத்தியம் . திருநங்கை . மருத்துவக்கல்லூரி பேராசிரியர் . நரி போலீஸ் .கிளைமாக்ஸ் காட்சி நடக்கும் காம்ப்ளக்சின் பார்க்கிங் கதவை திறந்துவிடும் அந்த தாத்தா.

பின் பாதியின் பின்னணி இசை & ஒளிப்பதிவு .




முன் பாதியின் பின்னணி இசை . ஒரு சில இடங்களில் அல்ல நிறைய இடங்களில் அதீத ஒலி. பின் பாதியைப்போலவே நிறைய இடங்களில் நிசப்த இசையை பயன்படுத்தி இருக்கலாம் .

உலகத்தரமான படம்னு நிறையப் பேர் எழுதியிருந்தாங்க . உலகத்தரமான படம் ன்ன என்னவென்றும் , அந்த படங்களின் என்னவெல்லாம் இருக்கும் அல்லது இருக்கவேண்டுமென்றும் சொன்னால் பரவாயில்லை .

படம் பார்த்து முடித்த பின் . வேகாத வெயிலில் சுற்றி விட்டு வந்து ஏசி அறையில் நுழைந்த பின் வழக்கமாக வரும் ஒரு சின்ன தலைவலி .

படத்தில் நிறைய குறியீடுகளும் , பின் நவீனத்துவமும் இருப்பாதாக சொல்கின்றார்கள் . எம்மைப்போன்ற C செண்டர் ரசிகர்களுக்கு கோனார் நோட்சே போட்டாலும் புரியாது . யாரவது குறியீடுகளை விளக்கி எழுதியிருந்தால் பின்னூட்டத்தில் சொல்லிச்செல்லுங்கள்  நானும் A & B சென்டருக்கு மாற முயற்சி செய்கின்றேன் .  

படமோ , எழுத்தோ , ஓவியமோ ஒரு படைப்பை விமர்சிக்கும்பொழுது ரெண்டு விசயங்கள் இருப்பதாக நினைக்கின்றேன் . ஒன்று  : படைத்தவனின் ரசனை சரியில்லை . இரண்டு : விமர்சிப்பவனின் ரசனை சரியில்லை . இங்கே முழுமையான படைப்பாளியும் இல்லை , முழுமையான விமர்சகனும் இல்லை . எல்லோருமே முழுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கும் அரைகுறைகளே . இது என்னுடைய தனிப்புத்தியில் தோன்றியது . ஆகையால் பொதுப்புத்தியாக பாவித்து யாரும் கல்லெடுக்கவேண்டாம். J


ஹை(ய்யோ)க்கூ..!

கண் தெரிந்தும்
தடவுகின்றான்
ஸ்மார்ட் போன் வைத்திருப்பவன் ....!


பிளாக்குல ட்வீட்டு ...!

ஜவுளிக்கடை கண்ணாடி முன் புதுத்துணியை போட்டுப் பார்க்கும்பொழுது கேவி.ஆனந்த் பட ஹீரோ மாதிரி தெரியும் நான் , அதே துணியை வீட்டுக்கண்ணாடி முன் போட்டுப்பார்க்கும்பொழுது பாலா பட ஹீரோ மாதிரி தெரிகின்றேன். // கண்ணில் பிரச்சினையா , கண்ணாடியில் பிரச்சினையா ....? //


டிஸ்கி : ஆமா அதென்ன நிலாச்சோறு அப்டின்னு கேட்பவர்களுக்கு , அம்மா தன்  குழந்தைக்கு சோறு ஊட்டுவதற்காக நிலவை காட்டி கதை , கவிதை , கற்பனை ன்னு  என்னென்னமோ சொல்லுவார் . அவரின் நோக்கம் குழந்தைக்கு எப்படியாவது சோறு ஊட்டிவிடவேண்டுமேன்பதே அதில் தர்க்கம் செய்யவோ , விவாதிக்கவோ ஒன்றும் இருக்காது . அதைப்போலவே ஞானும். என்னுடைய தளத்திற்கும் நாலு பேரு வரணும் என் எழுத்தையும் வாசிக்கனும்ங்க்குற எண்ணத்தைதவிர வேறொன்றுமில்லை பராபரமே ...! J


என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .






Jul 8, 2013

ஏதேதோ எண்ணங்கள்...!






ஞானும் ஞானி ...!

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் தவமிருக்கும் ஒவ்வொரு முறையும் , உறவுகளுடனும் , நட்புகளுடனும் இன்னும் கொஞ்சம் பிரியமாக நடந்துகொள்ளவேண்டும் , கோபத்தைக்குறைத்துக் கொள்ளவேண்டும் , பொறுமையாக இருக்கவேண்டும் , இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும், அழகனா, அமைதியான வாழ்க்கை வாழவேண்டும் என்று நல்ல எண்ணங்கள்  மனத்தில் தோன்றுகின்றது . ஆனால் , உடல் கொஞ்சம் கொஞ்சமாக நலமாக ஆரம்பிக்கும் அதேசமயம் மனம் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டுப்போக ஆரம்பித்துவிடுகின்றது.

அன்னக்கொடியும் அமீரும் ...!

அன்னக்கொடி படம் பார்த்த பின் அகில உலகத்திலேயே அளவில்லா ஆனந்தப்பட்டிருக்கக்கூடிய  ஒரே ஒருவர் – அமீர் . // என்ன மாமா தப்பிச்சுட்டோம்ல ....! //


ஹைய்யோ மானஸி ...!

லீலை படத்தின் ஒருகிளி பாடலில் பார்த்து ரசித்த “மானSEE”யை அதற்கப்புறம் எங்குமே ‘SEE’ர்க்கவில்லை . வெகு நாட்கள் கழித்து இதோ இப்பொழுது நகைக்கடை விளம்பரம் ஒன்றில் .
ஹையோ “மானSEE” ....! எவ்ளோ அழகான எக்ஸ்பிரசன்ஸ் ....! சான்சே இல்ல ....!


பிளாக்குல ட்வீட்டு ...!

சாலையில், நொறுங்கிய கண்ணாடிச்சிதறல்களை பார்க்கும் பொழுதும்  , ஆம்புலன்சின் அலறலை கேட்கும்பொழுதும் ஆக்சிலேட்டரின் வேகம் தானாகவே குறைந்துவிடுகின்றது .  // அன்னிச்சை செயலா ? இல்லை உயிர்பயமா ?  //


வலிக்குது ....!

பகல் பொழுதுகளில் வரும் உடல் உபாதைகளைக்காட்டிலும் , இரவுகளில் வரும் உபாதைகளுக்கு மட்டும் எங்கிருந்துதான் அப்படியொரு வலி வருகின்றதோ . யப்பா ...! முடியலப்பா முடியல...! வலி தாங்க முடியல ...!

பேச்சு எங்கள் மூச்சு ...!

விஜய் டிவியில் விரும்பி பார்த்த ஒரு நிகழ்ச்சி “ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” . அரைகுறை ஆடல் பாடல் நிகழ்ச்சியெல்லாம் ஆறு சீசன் தொடரும்போது, அவசியமான ஒரு நிகழ்ச்சி நிச்சயமாக அடுத்தடுத்து தொடரும் என்று எதிர்பார்த்தேன் . ஆனால் ஒரே ஒரு சீசனோடு முடித்துக்கொண்டது , ரெம்ப வருத்தமாகவும் , கோவமாகவும் இருந்தது .

கோவம் இப்பொழுது சந்தோசமாக மாறிவிட்டது . இதோ போன வாரத்தில் இருந்து அமர்க்களமாக ஆரம்பித்து விட்டார்கள் அடுத்த சீசனை . ஞாயிறுகளில் காலை பத்து மணி முதல் பதினோருமணி வரை ஒளிபரப்புகின்றார்கள் . தவறவிடக்கூடாத நிகழ்ச்சி , அவசியம் பாருங்கள் .

சென்ற சீசனின் வெற்றியாளர் விஜயன் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்த்தேன் . ஆனால் , கவித சூர்யா வழங்குகிறார் .நன்றாகவே தொகுக்கின்றார் . என்ன SO தான் பாவம் பாடய்ப்படுத்துகின்றது .


என்ன கொடும சார் இது ...?

மேற்படி நிகழ்ச்சியில் பேசிய ஒரு பேச்சாளர் , இந்திய வரலாற்றிலேயே என்று சொல்லுவதற்குப்பதிலாக , இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே என்று சொல்லிவிட்டார் ....! தொலக்காட்சிபெட்டிகளின் வீரியம் அந்த அளவு இருக்கின்றது ....! இன்னும் கொஞ்ச நாட்களில் மொத்தமாக மழுங்கடித்துவிடுவார்கள் .


என்றென்றும் புன்னகையுடன்...
ஜீவன்சுப்பு .




Apr 8, 2013

நீயா நானா – பயம் பார்ட் - ஒண்.




வாரா வாரம் நீயா நானா பாக்கலைனா அந்த வாரமே முழுமை பெறாது எனக்கு . சில சமயம் சூப்பராகவும் , சில சமயம் சூர மொக்கையாவும் இருக்கும் . அந்தவகையில் போனவாரம் சூப்பர் எபிசோடு.

பயந்த சுபாவம் கொண்ட ஆண்களும் , தைரியமான சுபாவம் கொண்ட பெண்களும்  பரஸ்பரம் விவாதித்துக்கொண்டார்கள் . பொதுவாகவே நீயா நானாவில் பெண்களின் வாய்(ஸ்) தான் ஓங்கியிருக்கும் . இந்த வாரமோ, பயந்த சுபாவம் கொண்ட ஆண்கள் .. யார் அசத்தியிருப்பாங்கன்னு சொல்லவும் வேணுமா என்ன ....?

நிகழ்ச்சியில்,  நிறைய “அம்பிகளை” பார்க்க முடிந்த அதே சமயம் நிறைய “சொர்ணாக்காக்களை”யும் பார்க்க முடிந்தது . நிகழ்ச்சி முழுவதும் நிறைய சுவராஸ்யங்கள் , சும்மா அதகளம் பண்ணிவிட்டார்கள்  . சிறப்பு விருந்தினராக வந்திருந்த “திருநங்கை” யின் பேச்சு அவ்வளவு சிறப்பு . சிரிக்க சிரிக்க அவர்களின் வலியை சொன்னார் . யூ டியூபில் ய்ப்பாருங்கள் . அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய பகுதி.

ஆண்கள் உங்கள் பயத்தை சொல்லுங்கள், என்று கோபி கேட்டதற்கு கூட பயந்து பம்முகிறார்கள் என் சகோக்கள் . அவர் அங்கு கேட்டுக்கொண்டிருக்கும் போதே, நான் என் பயத்தை பட்டியலிட்டு கொண்டிருந்தேன் . என்னோட பட்டியல படிச்சு பாத்தாவே, பயமா இருக்கு . ஆக்சுவலா விஜய் டிவி காரங்க என்னையதான் குண்டுக்கட்டா கட்டி தூக்கி போயி பேச விட்ருக்கணும் , மிஸ் பண்ணிட்டாங்க .

சரி வாங்க பாக்கலாம் என்னோட பயப்பட்டியல :

லிப்ட் பயம் , எஸ்க்லேட்டேர் பயம் , ஏரோபிளேன் பயம் , ஆட்டோமேட்டிக் செக்போஸ்ட் பயம் , கடல்ல முங்கி குளிப்பது பயம் , மொட்ட மாடி பயம் , ரோலர் கோஸ்டர் பயம், செயின்ட் வீல் பயம் , பேய் படம் பயம் , நடு ராத்திரி போன் அழைப்பு பயம் , டாக்டர் பயம் , லேப் டெஸ்ட் ரிசல்ட் பயம், காரில் முன் சீட்டு பயணம் பயம் , டூ வீலரில் பின் சீட்டு பயணம் பயம் , கியாஸ் பயம், பெண்களிடம் பேசுவது பயம், ட்ரைன் பாத்ரூம் பயம் , சண்டை பயம், மேடைப்பேச்சு பயம்,
சலூனில் ட்ரிம் பண்ணுவது பயம் ... பயம் ...பயம் ...பயம் ....!

என்ன ...? பயந்தீங்களா ...சாரி படிச்சீங்களா ...? “தெனாலி” பயத்தவிட பெருசா இருக்கா ? இது சும்மா ட்ரைலர் தான் ..மெயின் பிச்சர்ல இதவிட பெரிய பயம்லாம்  இருக்கு .! இதுலென்ன பயப்புடுறதுக்கு இருக்குன்னு நீங்க கேக்கலாம் .... மேல படிங்க பாஸ்  ....!

லிப்ட் பயம் :

தனியா லிப்ட் ல போயிட்டு இருக்கும் போது நடு வழில லிப்ட் ரிப்பேர் ஆகிடுச்சுன்னா ...? கரண்ட் கட்டாகிடுச்சுன்னா ? ஆத்தாடி நெனச்சுப்பாத்தாவே குப்புன்னு வேர்த்துக்கொட்டுது . எப்பவுமே கூட்டத்தோடதான் லிப்ட்ல ஏறுவேன் , இல்லாட்டி “டிரைவர்” இருக்குற லிப்டா பாத்துதான் ஏறுவேன் . ரெண்டுமே இல்லனா இருக்கவே இருக்கு நடராஜா சர்வீஸ் . படி..படி..படியா ஏறிடுவேன் அது ஏழு மாடியாவே இருந்தாலும் . 


எஸ்க்லேட்டேர் பயம் :

நாலு வருசத்துக்கு முன்னாடி பெங்களூர்ல , மொத மொதல்ல நான்  எஸ்கலேட்டர் ஏறுனத , நீங்க பாத்ருந்தீங்கன்னா இன்னைக்கு வரைக்கும் நெனச்சு , நெனச்சு சிரிச்சுருப்பீங்க . ஒரு கால மேல் படியிலயும் , இன்னொரு கால கீழ் படியிலையும் வச்சுகிட்டு நான் “பப்பரபான்னு” போனத பாத்து பின்னாடி வந்த பொண்ணுங்கல்லாம் குய்யோ முறையோன்னு சிரிச்சாங்க . ஒரே கேவலமா  போச்சு . இப்பகூட மாலுக்கு போனா , யார்கூட போறனோ அவங்க கைய நல்லா உடும்பு மாதிரி பிடிச்சுட்டு தான் ஏறுவேன் . தனியா போனா சுத்தி முத்தும் பாப்பேன், யாரும் என்ன பாக்குறாங்கலான்னு , குறிப்பா பொண்ணுங்க . யாரும் பாக்கலைங்குறத உறுதிப்படுத்திட்டு தான் ஏறவே ஆரம்பிப்பேன் . அப்பக்கூட ஏதாவது ஒரு புளோர்ல , ஏதாவது செல்போன் ரிங்டோன்  சிரிச்சாக்கூட, என்ன பாத்து யாரோ ஒரு பொண்ணு சிரிக்கிற மாதிரியே ஒரு பீலிங் .

ஏரோபிளேன் பயம் :

பஸ்லயோ , டிரைன்லையோ போகும்போது ஜன்னல் வழியா முழு தலையையும் வெளிய நீட்டி எட்டி பாக்குற மாதிரி, ஏரோபிளைன்லையும் எட்டி பாத்தா என்னாகும்னு என்னோட நண்பேன்டாகிட்ட கேட்டேன் . அதுக்கு அவன் காட்டுன காட்டு இன்னவரைக்கும் பயமா இருக்கு .

ஆட்டோமேட்டிக் செக்போஸ்ட் பயம் :

எங்க கம்பெனில மொத்தம் ரெண்டு கேட்டு அன்ட் ரெண்டு செக் போஸ்டு . உள்ள போறதா இருந்தாலும் சரி வெளிய போறதானாலும் சரி . ரெண்டு செக்போஸ்டையும் தாண்டி தான் போகணும் . ரெண்டுமே தானியங்கி . ஒவ்வொருமொற செக் போஸ்ட்ட கடக்கும் போதும் ஒரு பயம் இருந்துட்டே இருக்கும் . படார்னு தலையில விழுந்துட்டா..? செக்யூரிட்டி வேற அவர் பங்குக்கு பீதிய கெளப்பி விட்டுருந்தாரு தானியங்கி அடிக்கடி ரிப்பேராகிடுதுன்னு . டூ வீலர்ல  செக்போஸ்டை கடக்கும் ஒவ்வொருமுறையும் கண்ண மூடிட்டு அன்னிச்சையாகவே ஆக்சிலேட்டர அழுத்து அழுத்துன்னு அழுத்திடுவேன் . ஒரு மொற ஜெனரல் மேனஜோரோட கார்ல செக் போஸ்ட்ட கடக்கும்போது , நா கண்ண மூடுனத கவனிச்சுட்டார் மேனேஜர் . என்னடா பண்ற..? ன்னு கேட்டார் . இல்ல சார் செக் போஸ்ட்ட தாண்டும்போது , போஸ்ட் தலைல  விழுந்துடுமோன்னு பயமா இருக்கு அதான்னேன் . சும்மா இடி இடின்னு சிரிச்சுட்டு.... மீ டூ ......ன்னு சொன்னாரு பாருங்க அய்யோ அய்யோ...!. அது என்னமோ தெரியலங்க நமக்கு இருக்க பலவீனமோ , பயமோ , நோயோ இன்னொருத்தருக்கும் இருக்குன்னு தெரிஞ்சா அப்டி ஒரு ஒரு இனம் புரியாத சந்தோசம் வந்துடுது எனக்கு .

கடல்ல முங்கி குளிப்பது பயம் :

எனக்கு கல்யாணமே வரமாடிங்குதுன்னு சொல்லி, எங்கம்மா ஜோசியம் பாத்துருக்காங்க . ஜோசியக்காறார் இன்னா சொல்லிருக்காரு ... ஒன்னும் கவலைபடாதீங்க, பய புள்ளய கூட்டிக்கினு போயி ராமேஸ்வரம் கடல்ல முங்கி எந்திரிங்க எல்லாம் கூடி வந்துரும்னு . ( அப்ப முங்குனதுதான் இன்னும்...! ) “சுப்ரீம் கோர்ட்டு சொன்னாகூட எங்கம்மா கேக்காது ஆனா ஜோசியக்காரர் சொன்னா ஒடனே கேட்டுடும்” , மறுபேச்சே கெடையாது. அப்றமென்ன பய(ண)ம் தான் . கடல் தீர்த்தத்துல (?) போயி முங்குற மாதிரி போங்கு காமிச்சுக்கிட்டு இருந்தேன். எங்கம்மா பாத்துடுச்சு , பொளேர்னு  பொடரிலேயே தட்டி , நல்லா முடிய புடிச்சு முங்கி , முங்கி எடுத்துச்சு பாருங்க . முங்குன முங்குல மூச்சு தெணறி , தண்ணியே சூடகிடுச்சு . ஆத்தாடி தண்ணிக்குள்ள அமுக்கி கொல்லவுள்ள போகுது ஆத்தான்னு பயந்துட்டு அப்டியே  புடிச்சு தள்ளிவிட்டுட்டு கரைக்கு ஒடியாந்துட்டேன் . இப்பகூட எங்கயாவது தண்ணில முங்குனா , சூசைட் அட்டன்ட் பண்ணிக்கபோற மாதிரியே ஒரு பீலிங் .

மொட்ட மாடி பயம் :

நாலஞ்சு மாடியெல்லாம் ஏறனும்னு அவசியமில்ல , ஒரு ரெண்டு மாடி இருக்குற பில்டிங் உச்சில ஏறி, அப்டிக்கா ஓரமா வந்து கீழ எட்டி பாத்தேன்னு வைங்க ....சும்மா கால் ரெண்டும் கதகளி ஆடும். இதுக்காகவே கட்டசுவரு இருக்குற மொட்டமாடின்னா ஒரே ஓட்டம் தான் அந்த ஏரியா பக்கமே “கால் வச்சு படுக்குறதில்ல” . அப்டியொரு  அலர்ஜி .

ரோலர் கோஸ்டர் & செயின்ட் வீல் பயம் :

சின்ன வயசுல ஒரு மொற செயின்ட் வீல் ஏறினது இன்னும் ஞாபகம் இருக்கு . செயின்ட் வீலவிட நா தான் அதிகமா கத்துனேன் வீல் ..வீல்ன்னு ..! நா கதறுன கதறுல. பாதிலேயே நிறுத்தி எறக்கி விட்டுடாய்ங்க . நாலு வருசத்துக்கு முன்னாடி கூட , ஆபிஸ்ல இருந்து வீகாலேன்ட் டூர் கூட்டிட்டு போறோம்னு சர்க்குலர் வந்துச்சு . மலையாள “நன்பேண்டா சேட்டன்ட்ட” கேட்டேன் , ஏன்யா வீகாலேண்ட்ல இன்னாயா இருக்கும்னு ...... . அட உனக்கு தெரியாதா .. ? அடிபொலியுமாக்கும் . எனக்கு வளர இஸ்டம்மான ஸ்தலமாக்கும் . அவ்விட இருக்குற பெரிய ராட்டினத்துல ஏறி  அப்டியே தலகீழா பாத்தா அய்யோடா ... மொத்த கேரளாவும், சொர்க்கமா தெரியுமாக்கும்..! ங்கொய்யால சேட்டனோட எக்ஸ்பிரசனையும் , ராட்டினத்தையும் கேட்ட மாத்திரத்தில எனக்கு மூ.......ரமே வந்துடுச்சு . தலகீழா பாத்தா மொத்த கேரளாவும் சொர்க்கமா தெரியுமா ? நேரா பாத்தாவே எனக்கு நரகமே தெரியும்டா ன்னு சொல்லிட்டு, வீகாலேன்ட் டூரே போகல. விடுப்பெடுத்து வீட்டுல ரூம் போட்டு திட்டுனேன், டூர் ஸ்பாட்டா பிக்ஸ் பண்ணுனவய்ங்கள .

பேய் படம் பயம் :

காஞ்சனா படத்தையே நா கண்ண மூடிட்டு தான் பார்த்தேன்னா பாத்துக்கங்களேன். ஈரம் படம் பாத்து ஈரக்கொலையே நடுங்கிடுத்து . தமிழ் படத்துக்கே இப்டின்னா ,ஹாலிவுட்டுக்கு..? சான்சே இல்ல  இன்னவரைக்கும் ஒரு இங்கிலீஸ் ஹாரர் படம் கூட பாத்ததுல்ல. ஏலியன் பட போஸ்டர பாத்ததுக்கே காய்ச்சல் வந்துடுச்சு .

நடு ராத்திரி போன் அழைப்பு பயம் :

நான் சின்னப்புள்ளையா இருக்கும்போது , தந்தி வந்தா எங்க வீடே பீதில ஒறஞ்சு போயிடும் என்னமோ ஏதோன்னு . இப்ப தந்தி எல்லாம் எங்க..? எல்லாமே போன்தானே . நைட்டு நல்லா தூங்கிட்டு இருக்கும்போது பன்னெண்டு  ,ஒரு மணி வாக்குல  என்னமோ ஏதோன்னு ...செல்லு ரிங்காச்சுன்னா ... என்னமோ...!. ஏதோன்னு...! கலவரமாகி, வாரிச்சுருட்டி எந்திரிச்சு ஒரு படப்பிடிப்போட தான் போன எடுப்பேன் . அதுவும் அப்பா , அம்மா இருக்குற கிராமத்துலருந்து போன் வந்தா பீதிக்கு சொல்லவே வேண்டம் .

  
டாக்டர் பயம் :

எதுன்னா ஒடம்பு சரியில்லாம போச்சுன்னா அவ்ளோதான் , வராத  சிம்ப்டம்ஸ வந்ததா நெனச்சு   “கூகுள் கூகுள்” பண்ண ஆரம்பிச்சுடுவேன்  . அதுல எதாவது ஒன்ன படிச்சு , அந்த நோய் தான் வந்திருக்குன்னு பலமா நம்பவே ஆரம்பிச்சுடுவேன் . அப்றமென்ன தமிழ் சினிமா கதாநாயகன் ரேஞ்சுக்கு சோக கீதமா பாடிதிரிவேன் . ஒரு கட்டத்துக்கு மேல என்னோட இன்சை தாங்கமா ஆஸ்பத்திரிக்கு கூட்டினு போயிடுவாங்க . டாக்டருக்காக ஆஸ்பத்திரியில் காத்திருக்கிறதும் , முடிவெட்டுவதற்காக சலூனில் காத்திருப்பதும் எவ்வளவு பெரிய கொடும தெரியுமா ...? டாக்டர் என்ன சொல்ல போறாரோ ன்னு அதுக்கும் ஒரு பயம் . டாக்டர செக் பண்ணி பாத்துட்டு , ஒன்னும் இல்ல , “ஹி இஸ் ஆள் ரைட்டுன்னு” சொல்லுவாரு . ஒடனே சந்தோசமாகிடும். ஆனா எதுக்கும் ஒரு “பிளட் டெஸ்ட்” எடுத்து பாத்திரலாம்னு ஒரு செக்க வப்பாரு பாருங்க . போன செகண்ட்ல இருந்த சந்தோசம்  இப்ப சந்”தோஷம்” ஆகிடும் .

லேப் டெஸ்ட் ரிசல்ட் பயம் :

பதினாலு மணிநேரம் பச்ச தண்ணி கூட குடிக்காம பட்டினி கெடந்து , காலங் காத்தால லேபுக்கு போனா , கொள்ள காச வாங்கிகிட்டு மனசாட்சியே இல்லாம ரத்தத்த உறிஞ்சிப்புடுவாங்க . ரிசல்ட் சாயங்காலம் . போர்டு எக்ஸாம் ரிசல்ட்டு கூட இவ்வளவு பயமுறுத்தாது . ஆனா லேப் டேஸ்ட்டு பயமுறுத்தும் . ரிசல்ட் பாசிட்டிவ்னு சொன்னா பயப்புடனும் , நெகட்டிவ்னு சொன்னா சந்தோசப்படனும் என்னேவொரு முரண்பாடு . உங்களுக்கு ஒன்னும் இல்லா “எவ்ரிதிங் இஸ் ஃபைன் அப்டிங்குற” நர்ஸ் கொரல கேட்டதுக்கப்புறம் தான் தொண்டக்குழியில எச்சியே எறங்கி என் கொரலே வெளில வரும் . நா நல்லாருக்கோம்ங்க்குற சந்தோசம் கொஞ்ச நேரந்தான் . அதுக்கப்புறம் ? ச்சே ..இம்புட்டு காச கொடுத்து , பத்தாததுக்கு ரத்தத்தையும் கொடுத்து கடசில ஒன்னுமில்ல எல்லாம் நல்லாருக்குன்னுட்டாயங்களே , அம்புட்டும் வேஸ்டா போச்சே , அட்லீஸ்ட் எதுனா ஒன்னு கூட கொறைய இருந்துருக்கலமோன்னு மனஸ் அடிச்சுக்குது .

  
யப்பா எழுதுனத படிச்சு பாத்தாவே பயமா இருக்கு . இன்னைக்கு போதுங்க ...முடியல..! “பாக்கி பயத்த” அடுத்த பதிவுல பாக்கலாம் ....! அதுவர இந்த வீடியோவ பாருங்க .





நீயா நானா – பயம் பார்ட் டூ  - விரை....”வீல்:.......!